Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்துக்கு ஹேப்பி.. இப்பவே 5 வந்தே பாரத் ரயில்கள் ரெடியா இருக்கு.. சென்னை ஐசிஎப் இப்படி அசத்துதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலை ரயில் பெட்டிகள் தயாரிப்பில் உலக நாடுகளை வியக்க வைத்து வரும்நிலையில், இன்னொரு குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது.

உலக அளவில் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் மிக முக்கியமான தொழிற்சாலையாக, சென்னையின் ஐசிஎஃப் (ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை) திகழ்ந்து வருகிறது..

Vande bharat Chennai ICF Tamil Nadu

ரயில் பெட்டிகள்: ஐ.சி.எப்., எனப்படும் இந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில், 500க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில், 75,000க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதில் பாரத் ரயில் ரயில்களின் தயாரிப்புகளும் அடங்கும்.. சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள், ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன... வந்தே மெட்ரோ ரயில் உள்ளிட்ட ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் இங்குதான் நடைபெற்று வருகின்றன.

வந்தே பாரத்: அம்ரித் பாரத் ரயில் ஏற்கெனவே 2 ரயில்கள் தயாரித்து அனுப்பிய நிலையில், கூடுதலாக அம்ரித் வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல, ஐசிஎஃப்-ல் 2024-25-ம் நிதியாண்டில் 3,000 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானபோது, வந்தே பாரத் ரயில் பெட்டிகள், எல்எச்பி பெட்டிகள், மெமு ரயில் பெட்டிகள் போன்றவை அதிக அளவில் இங்குதான் தயாரிக்கப்பட உள்ளனவாம்..

அந்தவகையில், ஐசிஎஃப்-ல் 2024-25-ம் நிதியாண்டில் மொத்தம் 3,000 பெட்டிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில், 644 வந்தே பாரத் ரயில் பெட்டிகள், 276 மெமு ரயில் பெட்டிகள், 480 மின்சார ரயில் பெட்டிகள், 1400 எல்எச்பி (நவீன பெட்டிகள்) பெட்டிகள் உள்பட 3,000 ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

படுக்கை வசதிகள்: கடந்த ஜூலை 10ம் தேதியன்றுகூட, சென்னை ஐ சி எப் தொழிற்சாலைக்கு 50 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மற்றும் 50 வந்தே மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது.

இப்படிப்பட்டசூழலில், 5 புதிய வந்தே பாரத் ரயில்கள் இங்கு தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "ஐசிஎப்-ல் இதுவரை 60க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.. இந்த நிதியாண்டில் மட்டும் 3515 ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவைகளில் 658 வந்தே பாரத் ரயில் பெட்டிகளும், 1536 எல்எச்பி பெட்டிகளும் இடம்பெற உள்ளது.

எப்போது இயங்கும்: இப்போதைக்கு 5 புதிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு இறுதி கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். அடுத்து 2 வாரங்களில் இந்த 5 ரயில்களும் ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகே இந்த ரயில்களை எந்த வழித்தடங்களில் இயக்குவது? என்பது குறித்து ரயில்வே வாரியம் அறிவிக்கும்" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+