தேசத்தை கட்டியெழுப்புவதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பறியது #OurTeachersOurHeroes
பிரதமர் மோடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அன்பான ஆசிரியர்களுக்கு நல் ஆசிரியர் தின வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர்.
சென்னை: நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்பான ஆசிரியர்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆசிரியர்களின் தியாகத்தையும் மாணவர்களை கட்டமைப்பதில் அவர்களின் பங்களிப்பையும் பதிவிட்டுள்ளனர். #OurTeachersOurHeroes #HappyTeachersDay, #DearTeacher என்ற ஹேஸ்டேக் பதிவிட்டும் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மாணவனை வடிவமைப்பதற்கும் நமது தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பறியது. கடின உழைப்பாளிகளான ஆசிரியர்களுக்கு நாம் என்றும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர் தினத்தன்று, நம் ஆசிரியர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம் #OurTeachersOurHeroes" என பதிவிட்டுள்ளார்.

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்னும் மகாகவி பாரதியின் சொல்லை மெய்யாக்கி, தமிழகத்தை தலைநிமிர்ந்து நடைபோடச் செய்தவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள். உயர்கல்வியில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணியில் திகழக் காரணம் தன்னலமற்ற ஆசிரியர்களின் கடின உழைப்பே! #ஆசிரியர்தினம்" என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications