Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து.. தலித் மாணவருக்கு வன்கொடுமை.. கடும் நடவடிக்கை வேண்டும்.. எஸ்டிபிஐ

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டியலின மாணவருக்கு சக மாணவர்கள் குளிர் பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் இளங்கலை இறுதியாண்டு படித்து வரும் தலித் மாணவருக்கு அவருடன் படித்து வந்த நண்பர்கள் 2 பேர் குளிர் பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்ததாகவும், மறுநாள் நண்பர்கள் மத்தியில் சிறுநீர் கலந்த குளிர்பானத்தை குடித்ததாக கேலி செய்ததாகவும் தகவல் வெளியானது.

Harassment of student by mixing urine in soft drink, Strict action is needed SDPI

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகிய நிலையில் இந்த சம்பவத்திற்கு ஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஹஸ்ஸான் பைஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில், கடந்த ஜனவரி 6 அன்று நடைபெற்ற சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தின் போது, இளங்கலை சட்டப்பிரிவு இறுதியாண்டு படிக்கும் பட்டியலின மாணவர் ஒருவருக்கு, அவருடன் படிக்கும் 2 மாணவர்கள் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து குடிக்க வைத்துள்ளனர். அதோடு அந்த மாணவர்கள் குறிப்பிட்ட அந்த பட்டியலின மாணவரை சிறுநீரை குடித்ததாக மற்றவர்கள் முன்னிலையில் கேலி செய்துள்ளனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் பல்கலைக்கழகம் விசாரணைக் குழு அமைத்துள்ளதாகவும், அந்த அறிக்கையின் அடைப்படையில் காவல்துறையிடம் பல்கலைக்கழகம் புகார் அளிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. பட்டியலின சட்டத்துறை மாணவருக்கு எதிரான இத்தகைய மனிதத்தன்மையற்ற, அநாகரீகமான செயல் கண்டிக்கத்தக்கது. கல்வி நிலையங்களில் பேராசிரியர்களாலும், சக மாணவர்களாலும் பட்டியலின மாணவர்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகள் கவலையளிக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நாங்குநேரியில் பட்டியலின பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவர்களால் ஆயுத தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். ஆகவே, கல்வி நிலையங்களில் முடிவில்லாமல் தொடரும் இத்தகைய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+