குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து.. தலித் மாணவருக்கு வன்கொடுமை.. கடும் நடவடிக்கை வேண்டும்.. எஸ்டிபிஐ
சென்னை: திருச்சி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டியலின மாணவருக்கு சக மாணவர்கள் குளிர் பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் இளங்கலை இறுதியாண்டு படித்து வரும் தலித் மாணவருக்கு அவருடன் படித்து வந்த நண்பர்கள் 2 பேர் குளிர் பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்ததாகவும், மறுநாள் நண்பர்கள் மத்தியில் சிறுநீர் கலந்த குளிர்பானத்தை குடித்ததாக கேலி செய்ததாகவும் தகவல் வெளியானது.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகிய நிலையில் இந்த சம்பவத்திற்கு ஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஹஸ்ஸான் பைஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில், கடந்த ஜனவரி 6 அன்று நடைபெற்ற சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தின் போது, இளங்கலை சட்டப்பிரிவு இறுதியாண்டு படிக்கும் பட்டியலின மாணவர் ஒருவருக்கு, அவருடன் படிக்கும் 2 மாணவர்கள் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து குடிக்க வைத்துள்ளனர். அதோடு அந்த மாணவர்கள் குறிப்பிட்ட அந்த பட்டியலின மாணவரை சிறுநீரை குடித்ததாக மற்றவர்கள் முன்னிலையில் கேலி செய்துள்ளனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் பல்கலைக்கழகம் விசாரணைக் குழு அமைத்துள்ளதாகவும், அந்த அறிக்கையின் அடைப்படையில் காவல்துறையிடம் பல்கலைக்கழகம் புகார் அளிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. பட்டியலின சட்டத்துறை மாணவருக்கு எதிரான இத்தகைய மனிதத்தன்மையற்ற, அநாகரீகமான செயல் கண்டிக்கத்தக்கது. கல்வி நிலையங்களில் பேராசிரியர்களாலும், சக மாணவர்களாலும் பட்டியலின மாணவர்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகள் கவலையளிக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நாங்குநேரியில் பட்டியலின பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவர்களால் ஆயுத தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். ஆகவே, கல்வி நிலையங்களில் முடிவில்லாமல் தொடரும் இத்தகைய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications