இரவில் ஸ்டாலினுக்கு போன "பாசிட்டிவ்" மெசேஜ்.. திமுக குஷி.. அதுவிடுங்க, பாஜக "நிமிரும்" 7 தொகுதி?
சென்னை: இன்றைய தினம் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ள நிலையில், தலைவர்களின் அனல் பிரச்சாரம் தமிழகமெங்கும் வீசிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஒரு பிரத்யேகமான தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
தென்மாவட்டங்களில் காலூன்றுவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்திலும் இந்த முறை வாக்கு வங்கியையும் கணிசமாக உயர்த்திவிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதனால்தான் எப்போதும் இல்லாத அளவுக்கு, பிரதமர் மோடி இந்த 4 மாதங்களில் 8 முறை இங்கே வந்து போயிருக்கிறார்..

அதுமட்டுமல்ல, தமிழக பாஜக சார்பில் போட்டியிடும் பிரமுகர்கள் அனைவருமே பிரபலமானவர்கள் என்பதால், தங்களது வெற்றியை நிரூபிக்க வேண்டிய அவசியத்துக்கும், கட்டாயத்துக்கும், நெருக்கடிக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.. எனவே, திமுகவை குறி வைத்தே, தன்னுடைய தேர்தல் வியூகங்களையும் பாஜக முன்னெடுத்து வருகிறது.
நீலகிரி: இப்படிப்பட்ட சூழலில், கடந்த வாரம் நமக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதாவது, பாஜகவில் கோவையில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நீலகிரியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் எல். முருகன், தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சவுந்தராஜன், நெல்லையில் போட்டியிடும் பாஜக சீனியர் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் போட்டியிடும் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வெற்றிக்காக சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாம் பாஜக மேலிடம்.
இந்த தகவலை மோப்பம் பிடித்த திமுகவும் தீயாய் இறங்கி வேலை பார்க்க துவங்கிவிட்டதாம். இந்நிலையில்,இன்னொரு பிரத்யேகமான செய்தி நமக்கு கிடைத்துள்ளது.
பிரச்சாரம்: இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வு பெறும் நிலையில், நேற்றிரவு தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைத்து அமைச்சர்களையும், மா.செ.க்களையும் தொடர்புகொண்டு இறுதிக்கட்ட நிலவரத்தை விசாரித்திருக்கிறார். இதற்கு முன்பாக தமிழக உளவுத்துறையிடமிருந்து ஒரு ரிப்போர்ட் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் சொல்லப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் அமைச்சர்களிடமும் மா.செ.க்களிடமும் ஆலோசித்துள்ளார் ஸ்டாலின்.
பாஜகவின் அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன், கறுப்பு முருகானந்தம், ராமலிங்கம், சௌமியா அன்புமணி, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் போட்டியிடும் தொகுகளான, கோவை, நீலகிரி, நெல்லை, தஞ்சை, நாமக்கல், தர்மபுரி, ராமநாதபுரம், தேனி ஆகிய தொகுதிகளின் கடைசிக்கட்ட நிலவரம் தற்போது எப்படி இருக்கிறது என அதிக நேரம் கேட்டறிந்தாராம் முதல்வர் ஸ்டாலின்.
பொறுப்பு அமைச்சர்: இந்த தொகுதிகளில் திமுக (கூட்டணி கட்சியும் இதில் அடங்கும்) தான் ஜெயிக்கும் என்று பொறுப்பு அமைச்சர்களும் உறுதி தந்திருக்கிறார்களாம். ஆனால், மேற்கு மண்டலத்தில் ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும்தான் சற்று இழுபறி என்று சொல்லப்பட்டதாம்.
அதேபோல, கோவை மற்றும் தேனி மாவட்ட பொறுப்பு அமைச்சர்களிடம், கடைசி 3 நாட்களில் கூடுதல் கவனம் போடுங்கள் என்று வலியுறுத்தியிருக்கிறார் ஸ்டாலின். இதைத்தவிர, தேனி மற்றும் மதுரை தொகுதிகளுக்கு பொறுப்பாளரான அமைச்சர் மூர்த்தியிடம், தேனிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மதுரைக்கும் தர வேண்டும் என்றும், இந்த முறை மதுரை ஜெயித்தே ஆக வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறாராம்.
-
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications