Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்குப்பதிவு நேற்றைய தினம் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், வடசென்னை தொகுதியில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.. என்னன்னு பாருங்க

வட சென்னையில் திமுக சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, பாஜக சார்பில் பால்கனகராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதினி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Has the BJP thanked the North Chennai voters and what happened in the Tamil Nadu BJP

வட சென்னை மக்களவை தொகுதி உருவானதிலிருந்து நடைபெற்ற தேர்தல்களில், திமுக 11 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 1 முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன.. இதனால் வட சென்னை திமுகவின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது.

இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக பால்கனகராஜ் களமிறங்கியிருக்கிறார்.. பால்கனகராஜுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மாநிலத்தலைவர் அண்ணாமலை, கூட்டணிக் கட்சியான தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாக்கு சேகரித்துவிட்டு போனார்கள்.

வடசென்னை: திமுக எம்.பி. இந்த வடசென்னைதொகுதிக்கு எதுவும் செய்யாமல் 5 ஆண்டுகளை வீணடித்து விட்டார், என்று திமுகவை குற்றஞ்சாட்டி வாக்குகளை சேகரித்து வந்தார் பால் கனகராஜ்.

இந்நிலையில், நேற்றைய தினம் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.. 39 மக்களவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்ட 68,321 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆங்காங்கே வாக்கு எந்திர கோளாறுகள் நடைபெற்றதைபோலவே, வடசென்னை தொகுதியிலும் இந்த பிரச்சனை எழுந்தது.. எம்பி கலாநிதி வீராசாமி தன்னுடைய குடும்பத்துடன் வாக்களிக்க சென்ற அண்ணாநகர் கந்தசாமி கல்லூரியிலும் இயந்திரங்கள் பழுதால், 45 நிமிடத்துக்கு பிறகே வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குப்பதிவு: ஆரம்பத்தில் மந்தமான வாக்குப்பதிவு காணப்பட்ட நிலையில், நேரம் ஆகஆக, வாக்கு பதிவு அதிகரிக்க துவங்கியது.. அதாவது வழக்கமாக, வடசென்னையில் - 64.26 சதவீதம் மட்டுமே பதிவாகி வந்தநிலையில் நேற்று 69.26 சதவீதம் என 10 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் சார்பாக, பாஜக நிர்வாகி சதீஷ்குமார் என்பவர், வாக்குப்பதிவு முடிந்து, ஒருசில நிமிடங்களிலேயே வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, போஸ்டரையும் அடித்து வடசென்னை முழுக்க ஒட்டிவிட்டார்..

நன்றி: "வடசென்னை பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வழக்கறிஞர் பால் கனகராஜ் அவர்களுக்கு வாக்களித்த வள்ளல்களுக்கு நன்றி என்று எழுதப்பட்டிருந்தது.. பால்கனகராஜ், பிரதமர் மோடி, அண்ணாமலை உட்பட வடசென்னை பாஜக நிர்வாகிகளின் போட்டோக்கள் அந்த போஸ்டரில் பெரியதாக இடம்பெற்றுள்ளது.

அதாவது, நேற்று மாலை வாக்குப்பதிவு நிறைவடையும் முன்பேயே, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பாஜக வேட்பாளர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள், வடசென்னையில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+