தீர்த்தமலை கோவில்.. மாற்றுதிறனாளிகள் செல்ல சாலை.. பரிசீலிக்க ஹைகோர்ட் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீர்த்தமலை கோவிலுக்கு மாற்றுதிறனாளிகள் எளிதில் செல்ல சாலை அமைத்து தர கோரிய மனுவை 12 வாரத்திற்குள் பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலையில் பழமை வாய்ந்த தீர்த்தகிரீஸ்வர் கோயில் உள்ளது.. 1500 அடி உயரத்தில் இருக்கும் இந்த கோவிலிலுக்கு சாலை வசதி இல்லாத காரணத்தினால் மாற்றுதிறனாளிகளால் அங்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது என மாற்றுதிறனாளி மோகனீஸ்வரி என்பவர் மனுதாக்கல் செய்தார்

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.செல்வம் மாற்றுதிறனாளிகள் கோவிலுக்கு எளிதில் செல்லும் விதமாக அங்கு சாலை அமைத்து தர நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வாதம் செய்தார்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு, 12 வாரத்திற்குள் பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications