இந்து முன்னணி கொடிக் கம்பங்களுக்கு எதிரான வழக்கு: திருப்பூர் மாநகராட்சிக்கு ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்து முன்னணி கொடிக்கம்பங்களை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் திருப்பூர் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் விதிமுறைகளுக்கு முரணாகவும், சட்ட விரோதமாகவும் நடைபாதைகளில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் 500- க்கும் மேற்பட்ட கொடிக் கம்பங்களை எந்த அனுமதியும் பெறாமல் இந்து முன்னணி அமைப்பு தரப்பில் வைக்கப்பட்டுள்ளது.

HC issues notice to Tirupur Corporation

நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாமல், வைக்கப்பட்டுள்ள இந்த கொடிக்கம்பங்களை அகற்றக்கோரி கடந்த ஜூன் 12 ல் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடமும், மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, திருப்பூரில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள இந்து முன்னணி கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன், சேசஷாயி பெஞ்ச், திருப்பூர் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+