பாலில் கலப்படம்.. இதுவரை ஏன் நடவடிக்கை இல்லை.. விளாசிய ஹைகோர்ட்
சென்னை: கலப்பட பால் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சென்னை ஹைகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்ற ஆண்டு, தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், கலப்பட பாலை விற்பனை செய்வதாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருந்தார். இதையடுத்து அமைச்சருக்கு எதிராக தனியார் பால் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து வழக்கு தொடர்ந்தன.
இதனிடையே, வக்கீல் சூரியபிரகாசம் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், 'தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்து விற்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சொல்வதால், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று தனது மனுவில் கேட்டு கொண்டிருந்தார்.

நேரில் ஆஜர்
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக பொது சுகாதார துறை இயக்குனர் நேரில் ஆஜராகி, இது சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

23 பேர் மீது வழக்கு
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுசுகாதாரத்துறை இயக்குனர் நேரில் ஆஜரானார். அப்போது, பால் கலப்படம் தொடர்பாக 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களுக்கு ரூ.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஒரு அறிக்கையையும் தாக்கல் செய்தார்.

வழக்குகள் எத்தனை?
ஆனால் இந்த அறிக்கை, நீதிபதிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை. அறிக்கையில் உள்ள விவரங்கள் அரைகுறையாக உள்ளதாக கூறியதுடன், இதுவரை பாலில் கலப்படம் செய்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் அபராதம் மட்டும் விதித்துள்ளீர்கள்? பாலில் கலப்படம் செய்தது தொடர்பாக எத்தனை வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன?

அறிக்கை தாக்கல்
அவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? ஒருவேளை வழக்குகள் முடிந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அளித்த தண்டனைகள் என்னென்ன? என்று கேள்விகளை எழுப்பி, இது சம்பந்தமாக வரும் 21-ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

கண்டிப்புடன் உத்தரவு
இறுதியாக, கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கலப்படத்தை ஒருபோதும் தடுக்கவே முடியாது என்றும், குற்றம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications