Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுவும் சக்ஸஸ்.. யாரிந்த 5 வயது "பூந்தமல்லி தாத்தா".. ஜஸ்ட் 2 மணி நேரத்தில் சென்னை போலீஸாரின் சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 5 வயது சிறுவன் காணாமல் போய்விட்டான்.. "தாத்தா" என்ற வார்த்தையை தவிர, அவனுக்கு வேறு எதுவுமே சொல்ல தெரியவில்லை.. அப்பறம் என்னாச்சு தெரியுமா?

பூவிருந்தவல்லி அடுத்துள்ளது குமணன்சாவடி.. நேற்றுமுன்தினம், இந்த பஸ் ஸ்டாண்டு அருகே 5 வயது சிறுவன் ஒருவன் சைக்கிளிலேயே சுற்றித்திரிந்துள்ளான்.. தன்னுடைய வீடு எங்கே இருக்கிறது என்று தெரியாமல், நீண்ட நேரமாகவே பஸ் ஸ்டாண்டை சைக்கிளில் ரவுண்டடித்து கொண்டிருந்தான்.

Heart touching incident in Chennai Poonamallee and Who is this 5 year old boy Fantastic Job done by Tiruvallur Police

பஸ் ஸ்டாண்டு வாசலில் இருந்த ஒரு ஆட்டோ டிரைவர் இதைப்பார்த்துவிட்டு, சிறுவனிடம் ஏன் இங்கேயே சுற்றி திரிகிறாய்? உன் வீடு எங்கே இருக்கிறது? என்று கேட்டிருக்கிறார்.

முகவரி: அதற்கு அந்த சிறுவன், "தாத்தா - தாத்தா" என்றான்.. எத்தனை முறை விசாரித்தாலும் தாத்தா என்ற ஒற்றை வார்த்தையை தவிர, வேறு எதுவுமே சொல்ல தெரியவில்லை.. வீட்டு அட்ரசும் சொல்லவில்லையாம்.. ஒருவேளை வீட்டுக்கு செல்ல பயந்துகொண்டு இங்கேயே சுற்றித்திரிவதாக நினைத்த அந்த ஆட்டோக்காரர், சிறுவனை சைக்கிளில் வீட்டுக்கு செல்லுமாறு சொல்லிவிட்டு, பின்னாடியே சிறிது தூரம் ஆட்டோவில் சென்றார்.

ஆனால், வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் சிறுவன் திணறியதை அப்போதுதான் கவனித்தார் ஆட்டோ டிரைவர்.. அதற்கு பிறகுதான், பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தந்தார்..

தாத்தா: போலீசாரும் விரைந்து வந்து, சிறுவனிடம் விசாரித்தனர்.. அப்போதும் "தாத்தா" என்று மட்டுமே சிறுவன் சொல்லி கொண்டிருந்தான். இதையடுத்து, அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் வாக்கி டாக்கி மூலம் தகவல் சொன்னார்கள். அப்போதும் சிறுவனின் அட்ரஸ் கிடைக்கவில்லை..

அந்த நேரத்தில்தான், தன்னுடைய மகனை காணோம் என்று ஒரு தம்பதியினர், போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தந்தார்கள்.. உடனே அவர்களை அழைத்து, சிறுவனின் விவரம் மற்றும் அடையாளங்களை போலீசார் சொன்னார்கள்.. அந்த தம்பதியும், அது தங்கள் மகன்தான் என்று உறுதிப்படுத்தினார்கள்.. பின்னர் அவர்களை ஸ்டேஷனுக்கு வரவழைத்து, கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு சிறுவனை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

சபாஷ்: இவ்வளவும் வெறும் 2 மணி நேரத்தில் நடந்து முடிந்துள்ளது.. ஆட்டோ டிரைவரின் உதவியால், பெற்றோரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்ட இந்த சம்பவம் பூந்தமல்லி பகுதியில் நெகிழ்ச்சியை தந்து வருகிறது.. காவல்துறைக்கும் பெற்றோர் கண்ணீர்மல்க நன்றி சொல்லிவிட்டு போனார்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+