இதுவும் சக்ஸஸ்.. யாரிந்த 5 வயது "பூந்தமல்லி தாத்தா".. ஜஸ்ட் 2 மணி நேரத்தில் சென்னை போலீஸாரின் சபாஷ்
சென்னை: 5 வயது சிறுவன் காணாமல் போய்விட்டான்.. "தாத்தா" என்ற வார்த்தையை தவிர, அவனுக்கு வேறு எதுவுமே சொல்ல தெரியவில்லை.. அப்பறம் என்னாச்சு தெரியுமா?
பூவிருந்தவல்லி அடுத்துள்ளது குமணன்சாவடி.. நேற்றுமுன்தினம், இந்த பஸ் ஸ்டாண்டு அருகே 5 வயது சிறுவன் ஒருவன் சைக்கிளிலேயே சுற்றித்திரிந்துள்ளான்.. தன்னுடைய வீடு எங்கே இருக்கிறது என்று தெரியாமல், நீண்ட நேரமாகவே பஸ் ஸ்டாண்டை சைக்கிளில் ரவுண்டடித்து கொண்டிருந்தான்.

பஸ் ஸ்டாண்டு வாசலில் இருந்த ஒரு ஆட்டோ டிரைவர் இதைப்பார்த்துவிட்டு, சிறுவனிடம் ஏன் இங்கேயே சுற்றி திரிகிறாய்? உன் வீடு எங்கே இருக்கிறது? என்று கேட்டிருக்கிறார்.
முகவரி: அதற்கு அந்த சிறுவன், "தாத்தா - தாத்தா" என்றான்.. எத்தனை முறை விசாரித்தாலும் தாத்தா என்ற ஒற்றை வார்த்தையை தவிர, வேறு எதுவுமே சொல்ல தெரியவில்லை.. வீட்டு அட்ரசும் சொல்லவில்லையாம்.. ஒருவேளை வீட்டுக்கு செல்ல பயந்துகொண்டு இங்கேயே சுற்றித்திரிவதாக நினைத்த அந்த ஆட்டோக்காரர், சிறுவனை சைக்கிளில் வீட்டுக்கு செல்லுமாறு சொல்லிவிட்டு, பின்னாடியே சிறிது தூரம் ஆட்டோவில் சென்றார்.
ஆனால், வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் சிறுவன் திணறியதை அப்போதுதான் கவனித்தார் ஆட்டோ டிரைவர்.. அதற்கு பிறகுதான், பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தந்தார்..
தாத்தா: போலீசாரும் விரைந்து வந்து, சிறுவனிடம் விசாரித்தனர்.. அப்போதும் "தாத்தா" என்று மட்டுமே சிறுவன் சொல்லி கொண்டிருந்தான். இதையடுத்து, அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் வாக்கி டாக்கி மூலம் தகவல் சொன்னார்கள். அப்போதும் சிறுவனின் அட்ரஸ் கிடைக்கவில்லை..
அந்த நேரத்தில்தான், தன்னுடைய மகனை காணோம் என்று ஒரு தம்பதியினர், போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தந்தார்கள்.. உடனே அவர்களை அழைத்து, சிறுவனின் விவரம் மற்றும் அடையாளங்களை போலீசார் சொன்னார்கள்.. அந்த தம்பதியும், அது தங்கள் மகன்தான் என்று உறுதிப்படுத்தினார்கள்.. பின்னர் அவர்களை ஸ்டேஷனுக்கு வரவழைத்து, கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு சிறுவனை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சபாஷ்: இவ்வளவும் வெறும் 2 மணி நேரத்தில் நடந்து முடிந்துள்ளது.. ஆட்டோ டிரைவரின் உதவியால், பெற்றோரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்ட இந்த சம்பவம் பூந்தமல்லி பகுதியில் நெகிழ்ச்சியை தந்து வருகிறது.. காவல்துறைக்கும் பெற்றோர் கண்ணீர்மல்க நன்றி சொல்லிவிட்டு போனார்கள்..!!
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications