மொத்தம் 12 மாவட்டங்களில் செம மழை இருக்கு.. எங்கெல்லாம் தெரியுமா.. வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில்12 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது
சென்னை: பகலில் வெயில், மாலையில் மழை என மாறி மாறி காணப்படுகிறது வானிலை.. இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி மற்றும், தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
இப்போதைக்கு தென் மேற்கு பருவமழைக் காலம் நிலவி வருகிறது... இதனால் மாசம் ஆரம்பத்தில் இருந்தே தென் மேற்கு பருவமழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.. இதில் நம் தமிழகத்துக்கும் நல்ல மழை கிடைத்து வருகிறது.

ஆனால் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்துகிறது.. அதே மாலை நேரம் ஆகிவிட்டால், மழை பொழிவு அதிகமாக இருக்கிறது. அதனால், பகலில் வெயில், இரவில் மழை என மாறி மாறி நமக்கு வானிலை நிலவி வருகிறது.
இந்த சமயத்தில், அடுத்த 48 மணி நேரத்தில் நமக்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் நேற்று அறிவித்திருந்தது.. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவக் காற்று, மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
அதன்படி, தற்போது, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இன்றும் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. திருநெல்வேலி, தென்காசி, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு , கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டையில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கேரளா மற்றும் கர்நாடக கடற்கரை பகுதியிலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் தமிழகத்துக்கு பலத்த மழை என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications