சென்னையில் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கும் கனமழை... குஷியான சென்னைவாசிகள்!
சென்னை: சென்னை மற்றும் சுற்றியுள்ள புறநகரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் கோடைக்காலம் முடிந்து, பருவமழை சீசன் தொடங்கியதில் இருந்தே தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக மழை அளவு குறைந்து வந்த நிலையில், இந்த ஆண்டு நேர்மாறாக சற்று அதிகமாகவே மழை பெய்தது. இதனால் மாநிலத்திலுள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் பரவலாக நிரம்பி வருகின்றன.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது..
இந்நிலையில், தற்போது வேளச்சேரி, ஆர்ஏ புறம், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் என நகரின் பல்வேறு இடங்களிலும் நகரைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் பலத்த காற்றும் வீசி வருகிறது. திடீரென பெய்த இந்த மழை சென்னைவாசிகளை குஷிப்படுத்தியுள்ளது.

அதேநேரம் கனமழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களிலும் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மேலும், கனமழை காரணமாக ஓரிரு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பருவ மழை வழக்கத்தை விட அதிகமாகப் பெய்துள்ளதால், சென்னைக்கு நீர் ஆதாரமாகத் திகழும் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications