தமிழகத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற எம்பிக்கள் யார் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 5 வேட்பாளர்கள் யார் தெரியுமா?
நாடு முழுவதும் 18ஆவது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன் தினம் எண்ணப்பட்டன. மொத்தம் 543 லோக்சபா தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களில் வென்றது.
அதில் பாஜக மட்டும் தனித்து 239 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான "இந்தியா" கூட்டணி நாடு முழுவதும் 234 தொகுதிகளில் வென்றது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை.
அது போல் அதிமுகவும் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. தமிழகம், புதுவை என 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது. இந்த நிலையில் தமிழகத்தில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 5 வேட்பாளர்கள் யார் தெரியுமா?
மாணிக்கம் தாகூர்- விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) தன்னை எதிர்த்து போட்டியிட்ட விஜய பிரபாகரனை 4379 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

ஆ.மணி- தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட ஆ.மணி (திமுக) தன்னை எதிர்த்து போட்டியிட்ட சவுமியா அன்புமணியை 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மாதேஸ்வரன்- நாமக்கல் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட மாதேஸ்வரன் (கொங்கு மக்கள் தேசிய கட்சி) தன்னை எதிர்த்து போட்டியிட்ட தமிழ்மணியை (அதிமுக) 28,187 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மலையரசன்- கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட மலையரசன் (திமுக) தன்னை எதிர்த்து போட்டியிட்ட குமரகுருவை (அதிமுக) 53,784 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

டி.எம்.செல்வகணபதி- சேலம் தொகுதியில் போட்டியிட்ட டி.எம். செல்வகணபதி (திமுக) தன்னை எதிர்த்து போட்டியிட்ட விக்னேஷை (அதிமுக) 67,371 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.













Click it and Unblock the Notifications