இன்று முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பு.. பீர், விஸ்கி, பிராந்தி என்ன விலை.. முழு லிஸ்ட் இதோ!
சென்னை: சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று முதல் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபான விற்பனை துவங்க உள்ளது.
Recommended Video
தமிழக அரசின் வருமானத்தை உயர்த்தும் நோக்கத்தோடு, மதுபானங்களின் விலையை ஓரளவுக்கு தமிழக அரசு உயர்த்தி நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இன்றைய தினம் எந்தெந்த மது பானங்களுக்கு எவ்வளவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கிங்பிஷர் பிரிமியம் பீர், விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற பல்வேறு வகையான மதுபானங்களும் என்னென்ன விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதுபற்றி இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய விலை மற்றும் தற்போது உயர்த்தப்பட்டுள்ள விலை ஆகியவையும் இந்த பட்டியலில் உள்ளது. குடிமக்கள் தேவை என்றால் பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
இந்த நிலையில் தமிழக காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன் அளித்த பேட்டியில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் வசிப்பவர்கள் வசிப்பிட அடையாள அட்டையுடன்தான் சென்று மது வாங்கலாம். சான்று இல்லாதவர்களுக்கு டாஸ்மாக்கில் மது கிடைக்காது. சென்னையில் இருந்து சென்று மது வாங்க முயற்சித்தால் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications