கோயில் கருவறைக்குள் ஒலிக்கப் போகும் மகளிர் குரல்! அர்ச்சகர் பயிற்சி முடித்த 3 பெண்களுக்கு சான்று!
சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சி முடித்த 3 பெண்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் சான்று வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, ஸ்ரீரங்கம், மதுரை, திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, ஆகிய 6 நகரங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. அங்கு சேரும் நபர்களுக்கு ஓராண்டு பயிற்சி தரப்படுவதுடன் ஆகம விதிகள், பூஜைகள் உள்ளிட்ட அனைத்தும் கற்றுக்கொடுக்கப்படும்.

இதுவரை ஆண்கள் மட்டுமே அர்ச்சகர் பயிற்சி பெற்ற நிலையில் இப்போது பெண்களும் அர்ச்சகர் பயிற்சி பெற முன் வந்துள்ளனர். அந்த வகையில் 2022 -2023ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சியின் அடிப்படையில் 3 பெண்கள் உட்பட 94 பேருக்கு சான்று வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்தாண்டும் 15 பெண்கள் வரை அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் ஆர்வமுடன் இணைந்துள்ளனர். இதனை இந்து சமய அறநிலையத்துறையின் புதிய மைல்கல்லாக பார்க்கும் அரசு, ஓதுவார் பயிற்சி பெற்ற 3 பெண்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் பணிநியமனம் வழங்கும் எனத் தெரிகிறது.
அர்ச்சகர் பயிற்சி முடித்து சான்று பெற்ற ரஞ்சிதா, கிருஷ்ணவேனி, ரம்யா, என்ற 3 பெண்களும் ஸ்ரீரங்கத்தில் செயல்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இது குறித்து பெருமிதத்துடன் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்.. எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் இது குறித்து கூறியிருப்பதாவது; ''பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.
ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்...'' எனத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications