2026ல் வீடு மாற திட்டமிட்டு இருக்கீங்களா? வாடகை வீட்டு விதிகளில் அமலுக்கு வந்த பெரிய மாற்றம்.. கவனம்
சென்னை: புதிய வாடகை வீட்டிற்குள் நுழையும்போது, முன்பணம் எவ்வளவு, எப்போது வாடகை உயரும், ஒப்பந்தத்தின் அர்த்தம் என்ன என்பது போன்ற எல்லா விவரங்களையும் முன்கூட்டியே நீங்கள் அறிந்திருந்தால் எப்படி இருக்கும்? எந்தக் குழப்பமும் இல்லாமல், கடைசி நிமிட சிக்கல்கள் இல்லாமல் எளிதாக வீடு மாற முடியும்.
இந்தத் தெளிவைத்தான் இந்தியாவின் "வீட்டு வாடகை விதிகள் 2025" (Home Rent Rules 2025) கொண்டுவர முயல்கிறது. இந்த வருடம் வீட்டு வாடகை விதிகளில் செய்யப்பட்டு உள்ள மாற்றங்கள்.. நீங்கள் அடுத்த வருடம் வீடு மாறும் போது பெரிய அளவில் கவனம் பெறும்.

இந்தச் சீர்திருத்தங்கள், மாதிரி வாடகையை சட்டத்தையும் (Model Tenancy Act - MTA) அண்மையில் அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் மாற்றங்களையும் அடிப்படையாகக் கொண்டவை. இவை வாடகைதாரர் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் இருவருக்கும் வாடகையை மேலும் தெளிவானதாகவும், நியாயமானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
வாடகை சட்டம் - என்ன மாறுகிறது, ஏன் இது முக்கியம்?
இத்தனை ஆண்டுகளாக, இந்தியாவின் வாடகைச் சந்தையின் பெரும் பகுதி முறைசாரா ஒப்பந்தங்கள் மற்றும் வாய்மொழிப் புரிதல்களைச் சார்ந்தே இயங்கி வந்தது. இதனால் முன்பணங்கள் பரவலாக வேறுபட்டிருந்தன, வாடகை உயர்வுகள் கணிக்க முடியாதவையாக இருந்தன, மேலும் பல குடும்பங்கள் தங்கள் உரிமைகள் குறித்துத் தெளிவாக அறியாமல் இருந்தன.
2025 ஆம் ஆண்டுக்கான புதிய வாடகைச் சட்டத்தின்கீழ், வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்களை தீவிரமாக அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த புதிய சட்டம், வீட்டு உரிமையாளர்களும் வாடகைதாரர்களும் வாடகை ஒப்பந்தங்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கியுள்ளது.
முன்னதாக, பதிவு செய்யப்படாத வாடகை ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லும் என்ற நிலை இருந்தது. ஆனால், இனி அவ்வாறு செல்லாது. இந்த மாற்றம், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இருவரின் உரிமைகளையும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும்.
டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும்
புதிய சட்டத்தின்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இது ஆவணங்களின் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் அதிகரிக்கும். வாடகை ஒப்பந்தத்தின் காலம் 11 மாதங்களாக இருந்தாலும் அல்லது அதற்கு அதிகமாக இருந்தாலும், பதிவு செய்வது கட்டாயம். பதிவு செய்யப்படாத சொத்தை வாடகைக்கு விடுவது சட்டவிரோதமானது, மேலும் இதற்கு ₹5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். இது போலியான அல்லது தவறான ஒப்பந்தங்களால் ஏற்படும் சிக்கல்களையும் தவிர்க்க உதவும்.
2025 புதிய வாடகைச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
இந்த சட்டத்தின்படி, வீட்டு உரிமையாளரும், வாடகைதாரரும் முத்திரைத்தாளில் வாடகை ஒப்பந்தத்தை உருவாக்குவதுடன், டிஜிட்டல் முறையில் முத்திரையிட்டு பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் மட்டுமே ஒப்பந்தம் சட்டபூர்வமான செல்லுபடியாகும். இந்த பதிவு ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் செய்யலாம்.
இந்த விதியை மீறினால் ₹5,000 அபராதம் விதிக்கப்படும். இந்த சட்டம் இந்தியா முழுவதும் பொருந்தும். எனினும், சில தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம். வாடகைத் தொகை, பாதுகாப்பு வைப்புத்தொகை, கால அளவு மற்றும் அறிவிப்புக் காலம் போன்ற அனைத்து விதிமுறைகளையும் ஒப்பந்தத்தில் வீட்டு உரிமையாளர் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
- அனைத்து வாடகை ஒப்பந்தங்களுக்கும் கட்டாயம்
- டிஜிட்டல் முத்திரை கட்டாயம், இணங்காதவர்களுக்கு ₹5,000 அபராதம்
- 11 மாதங்கள் அல்லது அதற்கு மேல் உள்ள ஒப்பந்தங்களுக்கு கட்டாயப் பதிவு
- பாதுகாப்பு வைப்புத்தொகை வரம்பு அதிகபட்சம் 2 மாத வாடகை
- வாடகை உயர்வு ஆண்டுக்கு ஒரு முறை முன் அறிவிப்புடன் அனுமதிக்கப்படும்
- 60 நாட்களுக்குள் வாடகை தீர்ப்பாயத்தால் தீர்க்கப்படும்
- தேவையான ஆவணங்கள்- அடையாளச் சான்று, முகவரிச் சான்று, சொத்து ஆவணங்கள், புகைப்படங்கள், சாட்சிகள்
- பதிவு செய்யாதவர்களுக்கு ₹5,000 வரை
- இந்தியா முழுவதும் (பொதுத்துறை நிறுவனங்கள்/தொழில்களுக்கு சில விலக்குகள்)
வாடகை ஒப்பந்தப் பதிவின் நன்மைகளும் நோக்கங்களும்:
1. சட்டப் பாதுகாப்பு:
பதிவு செய்யப்பட்ட வாடகை ஒப்பந்தம் வீட்டு உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது. சர்ச்சைகள் ஏற்படும்போது, பதிவு செய்யப்பட்ட ஆவணம் நீதிமன்றத்தில் ஒரு செல்லுபடியாகும் ஆதாரமாக செயல்படும்.
2. மோசடி தடுப்பு:
அனைத்து ஆவணங்களும் அரசின் டிஜிட்டல் தரவுத்தளத்தில் சேமிக்கப்படுவதால், போலியான அல்லது தவறான ஒப்பந்தங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன.
3. வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவு:
வாடகைத் தொகை, பாதுகாப்பு வைப்புத்தொகை மற்றும் வாடகை உயர்வு போன்ற விதிமுறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு, தவறான புரிதல்கள் மற்றும் சர்ச்சைகள் குறைக்கப்படுகின்றன.
4. விரைவான தகராறு தீர்வு:
சிறப்பு வாடகை தீர்ப்பாயங்கள் 60 நாட்களுக்குள் தகராறுகளைத் தீர்த்து, இரு தரப்பினருக்கும் சரியான நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்யும்.
இந்த மாற்றங்களை தீவிரமாக அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த புதிய சட்டம், வீட்டு உரிமையாளர்களும் வாடகைதாரர்களும் வாடகை ஒப்பந்தங்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கியுள்ளது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க!












Click it and Unblock the Notifications