அசோக்நகரில்.. நைட் 1 மணிக்கு.. நிவேதா பின்னாடியே சென்ற ஓலா பைக் டிரைவர்.. அப்பறம் என்னாச்சு?
ஓலா பைக் டிரைவரை சென்னை போலீசார் கைது செய்து விசாரிக்கிறார்கள்
சென்னை: நைட் நேரம் 1 மணிக்கு, நிவேதா பின்னாடியே சென்றுள்ளார் ஓலா பைக் டிரைவர் ஒருவர்.. அதன்பிறகு என்ன நடந்தது?
சென்னை ஆதம்பாக்கம் அடுத்த நியூ காலனி பகுதியில் வசித்து வருபவர் நிவேதா... இவர் ஒரு பைக் சாம்பியன்.. 2 முறை தேசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையும்கூட.
இவர் மகளிர் மோட்டார் சைக்கிள் கிளப் என்ற நிறுவனத்தையும் சொந்தமாக நடத்தி வருகிறார். மேலும், சோஷியல் மீடியாவிலும் எப்போதுமே ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர். இவருக்கு ஏராளமான ஃபாலோயர்ஸ்களும் உண்டு.

திருமங்கலம்
கடந்த 11ம் தேதி இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகார் தந்திருந்தார்.. அதில், நைட் நேரம், டூவீலரில் திருமங்கலம் சென்றுவிட்டு, அண்ணா நகரில் இருந்து வேலையையும் முடித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை அணிந்த மர்ம நபர் அசோக் பில்லர் பகுதியிலிருந்து இவரை பின்தொடர்ந்து வந்தாராம்.. ஒல்லியான உருவம் கொண்ட அந்த, நபர் ஆலந்தூர் வரை பின்னாடியே வந்துள்ளார்.. இதனால் பயந்துபோன அந்த பெண், வீட்டுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி இருக்கிறார்.

இருட்டு பகுதி
அதற்குள் அந்த நபரை காணோம்.. அவர் திரும்பி சென்றுவிட்டார் என்று நினைத்து கொண்டு, மீண்டும் வீட்டுக்கு கிளம்பியிருக்கிறார்.. ஆனால் மீண்டும் அந்த நபர் பின்னாடியே வந்தாராம்.. நைட் 1 மணிக்கு கருணீகர் தெரு, லக்கி கல்யாண மண்டபம் பகுதியை கடந்து செல்லும்போது, திடீரென அந்த மர்ம நபர் இந்த பெண்ணிடம் சென்று தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததுடன், செல்போனையும் பறிக்க முயன்றுள்ளார்.. இதற்கு நடவடிக்கை வேண்டும் என்று போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்ததுடன், காவல்துறைக்கும் தன்னுடைய ட்வீட்டை டேக் செய்திருந்தார் அந்த பெண்..

ஆதாரங்கள்
இந்த புகாருக்கு நடவடிக்கை எடுப்பதாக சென்னை காவல் துறையும் ட்விட்டரிலேயே பதிலளித்திருந்தது. உடனடியாக, சம்பந்தப்பட்ட நபரை தேடும் வேலையிலும் இறங்கியது.. ஆனால், அவரை பற்றின எந்த க்ளுவும் கிடைக்கவில்லை.. எனவே, சிசிடிவி ஆதாரங்களை மட்டுமே நம்பி போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.. அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து, அந்த நபரின் அடையாளங்களை சேகரித்தனர்.. அப்போதுதான் பிடிபட்டவர்தான் சந்திரகாசன் என்பவர்.. புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்..

இரும்பு கம்பெனி
இவரை பிடித்து விசாரித்தபோது, பாரிமுனையில் ஒரு இரும்பு கம்பெனியில் வேலை பார்க்கிறாராம்.. நைட் நேரங்களில் ஓலா பைக் ஓட்டி வந்துள்ளார்.. சம்பவத்தன்று, கஸ்டமர் ஒருவரை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் இறக்கி விட்டுவிட்டு, வீட்டுக்கு செல்லும்போதுதான், அசோக்நகர் பக்கத்தில் நிவேதா ஜெஸிகாவை பார்த்து, அவர் பின்னாடியே சென்றது தெரியவந்தது.. இப்போது போலீசார் இவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications