Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உறுதியா? எடப்பாடி அப்போது கொடுத்த வாக்குறுதி.. அவருக்கே எதிராக திரும்பியது.. அப்பாவுவின் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கொடுத்த வாக்குறுதி ஒன்றே அவருக்கு எதிராக திரும்பி உள்ளது.

தமிழ்நாடு அரசியலில் கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் கவனம் பெற்றது. முன்னதாக எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ பன்னீர்செல்வத்தை அமர வைக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதியது.

ஆர்பி உதயகுமார்தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் அவரைத்தான் அந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கை என்ன?

கோரிக்கை என்ன?

ஆனால், நான்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் நான்தான் அந்த இடத்தில் தொடர வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். இதனால் இன்று தமிழ்நாடு சட்டசபையில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் இதுவரை இருக்கைகள் மாற்றம் செய்யப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் இருக்கை எடப்பாடி பழனிசாமிக்கு, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓ பன்னீர்செல்வத்திற்கும் அளிக்கப்பட்டு இருந்தது.

இருக்கை மாற்றம்

இருக்கை மாற்றம்

இருக்கையை மாற்றாதது ஏன் என்று நேற்று சபாநாயகர் அப்பாவுவும் விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்திற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி கொடுத்த வாக்குறுதி ஒன்றுதான் தற்போது அவருக்கே எதிராக திரும்பி உள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு கடந்த மாதம் கடைசியில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணை

விசாரணை

சுமார் 20 நிமிடம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த பொதுக்குழு வழக்கில் அடுத்த விசாரணை அல்லது உத்தரவு வரும் வரை தற்போது நிலை நீடிக்க வேண்டும். பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த கூடாது. இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்ததும் உடனே.. எடப்பாடியிடம் இது உறுதியா என்று கேட்டனர். அதாவது தேர்தல் நடத்த கூடாது என்று உறுதி அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்கு நீதிபதிகளிடம்.. கண்டிப்பாக தேர்தல் நடத்த மாட்டோம் என்று எடப்பாடி தரப்பு உறுதி அளித்தது.

நவம்பர்

நவம்பர்

இந்த வழக்கு தற்போது நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குறுதிதான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பி உள்ளது. சட்டசபையில் யாரை எங்கே அமர வைக்க வேண்டும் என்பதை சபாநாயகர்தான் முடிவு எடுக்க வேண்டும். எனக்கு இருக்கை வசதியாக இல்லை. மாற்ற வேண்டும் என்று சொன்னால் மாற்றுவேன். ஆனால் மற்றவர்களை அந்த இருக்கையில் அமர வைக்க கூடாது என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதில் நானே முடிவு எடுக்க வேண்டும்.

இருக்கை

இருக்கை

சட்டப்பேரவை விதிகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவியாகும். துணை எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவி அதிகாரபூர்வமாக கிடையாது. அது கட்சிகளால் வழங்கப்படும் அடையாள பதவி. இரண்டு தரப்பும் இந்த பதவிக்காக வழங்கிய கடிதங்களை படித்தேன். ஓ பன்னீர்செல்வம் தரப்பு, வழக்கில் விசாரணை நடத்துகிறது. அதுவரை இதில் முடிவு எடுக்க கூடாது என்று கூறியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழு முடிவு, எம்எல்ஏக்கள் ஆதரவை குறிப்பிட்டு உள்ளது. இருப்பினும் சட்டமன்ற விதிகளின் இந்த கோரிக்கைகள் செல்ல கூடியதா என்று ஆய்வு செய்து வருகிறேன். அதே சமயம் அதிமுகவில் எதையும் மாற்ற மாட்டேன் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி உறுதி அளித்ததையும் இங்கே நினைவு கூற வேண்டும் என்று அப்பாவு கூறினார். அதாவது அதிமுகவில் இப்போது நிலவும் அதே நிலை தொடரும் என்று எடப்பாடி கொடுத்த வாக்குறுதியே அவருக்கு எதிராக திரும்பி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+