Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் செந்தில்பாலாஜி எப்படி இருக்கிறார்? புழல் சிறையில் முதல் வகுப்பு அறை! சகலவிதமான வசதிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவேரி மருத்துவமனையிலிருந்து செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் என்பதால் அவருக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

புழல் சிறை மருத்துவமனை வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, மின் விசிறி, கட்டில், மெத்தை, படுக்கைவிரிப்பு, நாளிதழ்கள், நாற்காலி, மேஜை என எல்லா வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. ஏசி ஒன்று தான் இல்லையே தவிர மற்றபடி எந்தக் குறையும் இல்லாமல் அமைச்சருக்கான முதல் வகுப்பு சலுகைகள் புழல் சிறையில் செய்து தரப்பட்டுள்ளன.

How is Minister Senthil Balaji? First class rooms in Puzhal Jail! All kinds of facilities!

அமைச்சர் செந்தில்பாலாஜி இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர் என்பதால் அவருக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் எனக் கருதப்படுகிறது. இதனால் புழல் சிறை மருத்துவர்கள் காலை, மாலை என செந்தில்பாலாஜியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

நேற்றிரவு அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறையில் வழங்கப்பட்ட இரண்டு சப்பாத்திகளை மட்டும் சாப்பிட்டிருக்கிறார். இன்று காலை சிறை கேண்டீனில் இருந்து இட்லி வாங்கிச் சாப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே சிறை உணவுகள் பிடிக்கவில்லை என்றால் விசாரணை கைதியாக உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிலிருந்து சாப்பாடு வரவழைத்து சாப்பிடலாம். ஆனால் அதற்கு நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறின்றி வெளிச்சாப்பாட்டை சிறைக்குள் எடுத்து வரமுடியாது.

புழல் சிறையில் முதல் வகுப்பு கைதிகளுக்கு வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறியும், வாழைப்பழமும் வழங்கப்படுவது வழக்கமாம். அமைச்சர் செந்தில்பாலாஜி கோழிக்கறி வேண்டாம் என்று கூறிவிட்டால் அவருக்கு நெய்யும், வாழைப்பழமும் மட்டும் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக புழல் சிறையில் சாதம், சாம்பார், கூட்டு ஆகியவை மதிய உணவாக தரப்படும். செந்தில்பாலாஜி முதல் வகுப்பு விசாரணை கைதி என்பதால் கேண்டீனில் தனக்கு பிடித்த உணவை அவர் வாங்கி சாப்பிட்டிருக்கலாம்.

இதனால் தற்போதைய சூழலில் அவர் புழல் சிறை கேண்டீன் உணவுகளையே சாப்பிட்டு வருகிறார். பொன்முடி வீட்டில் ரெய்டு, விசாரணை என பரபரப்பான செய்திகள் இன்று வெளியாகியிருந்த நிலையில் தினசரி நாளிதழ்களை படித்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. வரும் 26ஆம் தேதியோடு நீதிமன்ற காவல் முடிவதால் அன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

இதனிடையே செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா, தனது கணவர் விடுதலை பெற வேண்டி திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள திருநெடுங்கள நாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+