அமைச்சர் செந்தில்பாலாஜி எப்படி இருக்கிறார்? புழல் சிறையில் முதல் வகுப்பு அறை! சகலவிதமான வசதிகள்!
சென்னை: காவேரி மருத்துவமனையிலிருந்து செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் என்பதால் அவருக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
புழல் சிறை மருத்துவமனை வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, மின் விசிறி, கட்டில், மெத்தை, படுக்கைவிரிப்பு, நாளிதழ்கள், நாற்காலி, மேஜை என எல்லா வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. ஏசி ஒன்று தான் இல்லையே தவிர மற்றபடி எந்தக் குறையும் இல்லாமல் அமைச்சருக்கான முதல் வகுப்பு சலுகைகள் புழல் சிறையில் செய்து தரப்பட்டுள்ளன.

அமைச்சர் செந்தில்பாலாஜி இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர் என்பதால் அவருக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் எனக் கருதப்படுகிறது. இதனால் புழல் சிறை மருத்துவர்கள் காலை, மாலை என செந்தில்பாலாஜியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
நேற்றிரவு அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறையில் வழங்கப்பட்ட இரண்டு சப்பாத்திகளை மட்டும் சாப்பிட்டிருக்கிறார். இன்று காலை சிறை கேண்டீனில் இருந்து இட்லி வாங்கிச் சாப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே சிறை உணவுகள் பிடிக்கவில்லை என்றால் விசாரணை கைதியாக உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிலிருந்து சாப்பாடு வரவழைத்து சாப்பிடலாம். ஆனால் அதற்கு நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறின்றி வெளிச்சாப்பாட்டை சிறைக்குள் எடுத்து வரமுடியாது.
புழல் சிறையில் முதல் வகுப்பு கைதிகளுக்கு வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறியும், வாழைப்பழமும் வழங்கப்படுவது வழக்கமாம். அமைச்சர் செந்தில்பாலாஜி கோழிக்கறி வேண்டாம் என்று கூறிவிட்டால் அவருக்கு நெய்யும், வாழைப்பழமும் மட்டும் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக புழல் சிறையில் சாதம், சாம்பார், கூட்டு ஆகியவை மதிய உணவாக தரப்படும். செந்தில்பாலாஜி முதல் வகுப்பு விசாரணை கைதி என்பதால் கேண்டீனில் தனக்கு பிடித்த உணவை அவர் வாங்கி சாப்பிட்டிருக்கலாம்.
இதனால் தற்போதைய சூழலில் அவர் புழல் சிறை கேண்டீன் உணவுகளையே சாப்பிட்டு வருகிறார். பொன்முடி வீட்டில் ரெய்டு, விசாரணை என பரபரப்பான செய்திகள் இன்று வெளியாகியிருந்த நிலையில் தினசரி நாளிதழ்களை படித்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. வரும் 26ஆம் தேதியோடு நீதிமன்ற காவல் முடிவதால் அன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
இதனிடையே செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா, தனது கணவர் விடுதலை பெற வேண்டி திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள திருநெடுங்கள நாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியிருக்கிறார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications