அமைச்சர் செந்தில் பாலாஜி எப்போது பழைய நிலைக்கு திரும்புவார்? இருதய நிபுணர் சொல்லும் தகவல்!
சென்னை: இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எவ்வளவு நாட்களில் செந்தில் பாலாஜி இயல்பு நிலைக்குத் திரும்புவார் என இருதய நோய் நிபுணர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடுகளில் கடந்த 13ஆம் தேதி காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர் கடந்த 14ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது அவர் நெஞ்சுவலியால் கதறித் துடித்தார்.

இதையடுத்து செந்தில் பாலாஜியை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் அவரது ரத்தக்குழாய்களில் 4 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.
அதைத்தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கக் கோரி செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்று கடந்த 15-ந் தேதி அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையில் டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருந்தது. இந்த டாக்டர்கள் குழு செந்தில் பாலாஜிக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர் ரகுராம் தலைமையிலான மருத்துவக்குழு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சுமார் ஐந்து மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. 5 மணிநேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது.
அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், புதிய ரத்த நாளம் மூலம் இருதய தமணியில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டது. இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த 4 அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. அறுவை சிகிச்சையில் அமைச்சருக்கு 4 பைபாஸ் கிராஃப்ட்ஸ் வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது, சிறப்பு இருதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை மருத்துவக் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு நடைபெற்ற பைபாஸ் சர்ஜரி பற்றி இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் அருண் கல்யாண சுந்தரம் கூறுகையில், "பைபாஸ் அறுவை சிகிச்சை சுமார் 4 மணி நேரம் வரை நடைபெறும். இதில், ரத்த சர்க்கரை அளவு உள்ளிட்டவை கண்காணிக்கப்படும். அறுவை சிகிச்சைக்குப் பின் 3 நாட்கள் வரை தீவிர சிகிச்சை பிரிவிலும், 7 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிலும் இருப்பார். பைபாஸ் சிகிச்சை பெற்றவர்களை 7 நாட்களுக்கு பிறகு தான் டிஸ்சார்ஜ் செய்வார்கள்.
பைபாஸ் சர்ஜரி செய்தால் ஒரு மாதம் வரை ஓய்வில் இருப்பது அவசியம். இயல்பு நிலைமைக்கு திரும்ப 3 மாதங்கள் வரை ஆகலாம். பைபாஸ் சிகிச்சை நடைமுறைகள் நோயாளிகளை பொறுத்து சற்று வேறுபடலாம். இருப்பினும் பைபாஸ் சிகிச்சை நடைமுறைகள் நோயாளிகளைப் பொறுத்து சற்று வேறுபடலாம்.
வழக்கமாக இருதயம் செயல்பாட்டில் இருக்கும்போதே 'ஆன் பம்ப்' அறுவை சிகிச்சை நடைபெறும். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள் 80% இயல்பு நிலைக்குத் திரும்பவே 1 மாதம் ஆகும். பழைய நிலைக்குத் திரும்ப 3 மாதங்கள் ஆகலாம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications