வாட்ஸ் ஆப்பில் ஆழம் பார்ப்பேன்.. மாணவிகள் எதிர்த்தால் "சாரி ராங்போஸ்ட்"னு சமாளிப்பேன்.. ராஜகோபாலன்
சென்னை: மாணவிகளின் உடை குறித்தும் உடல் குறித்தும் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பும் ராஜகோபாலன், மாணவியின் பதிலை வைத்து அடுத்தகட்ட அசிங்கங்களை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Recommended Video
சென்னை கே கே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராஜகோபாலன். இந்த பள்ளியில் படித்துவிட்டு தற்போது மாடலிங் துறையில் இருக்கும் முன்னாள் மாணவி ஒருவர் இந்த ஆசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.

ராஜகோபாலன் கைது
இதையடுத்து ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காவல் துறையினர் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளனர். ஆன்லைன் வகுப்புக்காக உருவாக்கப்பட்ட குரூப்பில் இருக்கும் மாணவிகளின் செல்போன் எண்களை ஒவ்வொன்றாக ராஜகோபாலன் எடுத்து அதற்கு மெசேஜ் அனுப்புவாராம்.

உடலமைப்பு
முதலில் குறிப்பிட்ட மாணவியின் ஆடை, உடலமைப்பு குறித்து அனுப்புவாராம். அதற்கு மாணவியிடம் கிடைக்கும் பதிலை வைத்து அடுத்து ஆபாசமான வார்த்தைகளுடன் கூடிய மெசேஜ்களை அனுப்பி வைப்பாராம். ஆபாச படங்களின் வீடியோக்களையும் அனுப்புவாராம். ஒரு வேளை இவரது மெசேஜுக்கு எந்த மாணவியாவது எதிர்ப்பு தெரிவித்தால், உடனே சாரி ராங்போஸ்ட் தவறாக அனுப்பிவிட்டேன் என கூறி சமாளிப்பாராம்

லேப்டாப்கள்
ராஜகோபாலன் கைது செய்யப்பட்ட போது அவரது செல்போன்- லேப்டாப்கள பறிமுதல் செய்யப்பட்டு சைபர் கிரைம் போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். அதன்படி ரெக்கவரி சாப்ட்வேர் மூலமாக சைபர் கிரைம் போலீஸார் அதில் உள்ள தகவல்களை திரட்டியுள்ளனர்.

வாக்குமூலம்
மாணவிகளுடன் அவர் தனிப்பட்ட முறையில் உரையாடிய தகவல்கள் அனைத்தும் கிடைத்துவிட்டனவாம். இதனை வைத்து பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் போலீசார் ரகசியமாகவும் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியர் ராஜகோபாலனால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட மாணவிகளின் பட்டியலை சேகரித்து அவர்கள் அளிக்கும் தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications