வேலை இல்லாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு தமிழக அரசின் உதவித்தொகை திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலையில்லாத பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி, இதை பெறுவதற்கான தகுதிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

இதுகுறித்து டாப் இன்ஃபார்மர் எனும் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: என்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்க மாட்டேங்கிது பார்த்தால் அரசாங்கம் வேலை இல்லாதவங்களுக்கு கொடுக்கும் உதவித்தொகையும் கிடைப்பதில்லை. 10ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை வேலை இல்லாதவர்களுக்கு அரசாங்கம் மாதாமாதம் உதவித்தொகை வழங்கி வருகிறது.

How to apply for Tamilnadu government aid for unemployed graduates

விதிமுறைகள்: அந்த உதவித்தொகையை நீங்கள் பெறுவதற்கு அரசு வகுத்துள்ள விதிமுறைகளை விரிவாக பார்க்கலாம். முதல் தகுதி- பள்ளி படிப்பையோ அல்லது கல்லூரி படிப்பையோ தமிழகத்தில் படித்திருக்க வேண்டும் அல்லது பெற்றோர் தமிழகத்தில் 15 ஆண்டு வசித்திருக்க வேண்டும்.

பள்ளிக்கோ கல்லூரிக்கோ நீங்கள் ரெகுலராக போய் படித்தவர்களாக இருக்கக் கூடாது. அதற்கு பதிலாக நீங்கள் தொலைதூர கல்வியில் படித்தால் உதவித் தொகையை பெற தகுதி இருக்கிறது. நீங்கள் படித்து முடித்த வருஷம் முதல் 5 ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருப்பவர்களாக இருத்தல் வேண்டும்.

ஆவணங்கள்: இந்த உதவித்தொகையை பெற நீங்கள் அரசு துறையிலோ தனியார் துறையிலோ வேலை பார்க்கக் கூடாது. சுய வேலை வாய்ப்புகளையும் செய்யக் கூடாது. அரசிடம் இருந்து வேறு எந்த உதவித்தொகையையும் பெறுபவர்களாக நீங்கள் இருக்கவே கூடாது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ 50 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும். இதற்கான வருமான சான்று இணைக்கப்பட வேண்டும்.

என்னென்ன தேவை?: இதை விண்ணப்பிக்க பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 3, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புத்தகம், வருமான வரிச் சான்று, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்த அட்டை ஆகிய சான்றுகள் தேவைப்படுகின்றன. நீங்கள் இருக்கும் இருப்பிடத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் என ஒரு துறை இருக்கும்.

அங்கு போய் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். ஒரு வேளை உங்களுக்கு சிரமமாக இருந்தால் டாப் இன்ஃபார்மர் பேஜிக்கு ஒரு மெசேஜ் போட்டால் நாங்களே விண்ணப்பத்தை அனுப்பி வைக்கிறோம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மேற்கூறிய எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கொடுத்துவிட வேண்டும்.

எவ்வளவு ரூபாய் உதவித்தொகை: 10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவராக இருந்தால் மாதம் ரூ 200 கிடைக்கும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மாதம் ரூ 300 கிடைக்கும். 12 ஆம் வகுப்பு பாஸ் செய்திருந்தால் மாதம் ரூ 400 கிடைக்கும். இளநிலையோ முதுநிலையோ முடித்திருந்தால் ரூ 600 கிடைக்கும். இந்த பணம் மாதாமாதம் உங்கள் அக்கவுன்ட்டுக்கு வராது. 3 மாதங்களுக்கு ஒரு முறை வரும்.

பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற் படிப்புகளை படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்தால் ரூ 600 கிடைக்காது. மற்ற எந்த டிகிரி படித்திருந்தாலும் உங்களுக்கு உதவித் தொகை கிடைக்கும். இந்த உதவித் தொகையை பெற வயது வரம்பு 40 ஆக இருத்தல் வேண்டும். ஆதி திராவிடர், அல்லது பழங்குடியினருக்கு 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+