Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற 29-ந்தேதி முதல் விண்ணப்பிப்பது எப்படி? பெண்கள் அறிய வேண்டியவை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள், ஏற்கனவே விண்ணப்பித்தும் தகுதியிருந்தும் கிடைக்கப் பெறாதவர்கள் வரும் மே 29-ந்தேதி முதல் விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தமுறை விண்ணப்பங்களை ரேஷன் கடையில் சமர்பிக்க இயலாது. அரசு மாற்று திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதுபற்றி பார்ப்போம்.

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது. இந்த திட்டத்தை கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கழித்து, கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

kalaignar magalir urimai thogai magalir urimai thogai

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் அவர்களின் வங்கி கணக்கிலேயே ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 3வது வார தொடக்கத்தில் 1000 ரூபாய் மகளிருக்கு வழங்கப்படுகிறது. முதல்முறையாக திட்டம் அறிவிக்கப்பட்ட போது, 1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள். இவர்களில் வருமானவரி கட்டுவோர், வீட்டில் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போர், அரசு ஊழியர்கள் மற்றும் அரசின் பிற உதவி தொகை பெறுவோர் மற்றும் அதிக வருமானம் உள்ளவர்கள் நிராகரிக்கப்பட்டனர். மீதமுள்ள 1 கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது.

அதன்பின்னர், பலருக்கும் உதவி தொகை கிடைக்கவில்லை என்ற புகார்கள் வந்தன. இதையடுத்து விடுபட்டவர்கள் மேல்முறையீடு செய்ய அரசு அனுமதித்தது. அந்த வகையில் விடுபட்ட 7 லட்சத்து 15 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இதனிடையே மீண்டும் ஒரு முறை இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 11 லட்சத்து 86 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டார்கள். இப்படியாக கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகிறார்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பொறுத்தவரை தற்போது 1 கோடியே 14 லட்சம் பெண்கள் பெற்று வருகிறார்கள். இன்னும் 1 கோடியே 12 லட்சம் பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை.. இந்நிலையில் தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படியே வருகிற மே 29-ந்தேதி முதல் இந்த உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.

கடந்த முறை மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை, மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாம். எனவே அதற்கான முகாம் தமிழகம் முழுவதும் 29-ந்தேதி தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விண்ணப்பங்களை உடனடியாக ஆய்வு செய்து 2 மாதத்திற்குள் அவர்களுக்கு உரிமை தொகை வழங்கப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+