முகாமுக்கு போக முடியலையா.. வாக்காளர் அட்டையை வீட்டிலேயே விண்ணப்பிக்கலாம்! ஸ்மார்ட் போன் போதும்
சென்னை: வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே ஸ்மார்ட் போன் அல்லது கணினி மூலமாக ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்று பார்ப்போம்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய வாக்காளர்களை இணைக்கும் பணியில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வார்டு வாரியாக முகாம் அமைக்கப்பட்டு வாக்காளர் அடையாளர் அட்டை விண்ணப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சந்தர்ப்ப சூழல் காரணமாக அங்கு செல்ல முடியாதவர்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பிப்பதற்கான வசதி இருக்கிறது.

அதன்படி, "தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி கொண்ட இளம் வாக்காளர்கள், ஸ்மார்ட் போன் அல்லது கணினியில் உள்ள பிரவுசரில் voters.eci.gov.in இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திற்கு செல்லவும். அல்லது Voter Helpline Mobile என்ற மொபைல் செயலியை டவுன்லோட் செய்யவும். அதில் உங்கள் தொலைபேசி எண் மற்றும் பாஸ்வேர்டை கொடுத்து Sign Up செய்துகொள்ளுங்கள். அதன் பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கான Form-6 ஐ கிளிக் செய்யவும். அதை தொடர்ந்து NSVP எனப்படும் தேசிய வாக்காளர் சேவை போர்டலில் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிவு செய்வதற்கான ஆப்சனை கிளி செய்யவும்ம்.
உங்களின் மாநில மற்றும் நீங்கள் வசிக்கும் சட்டமன்றத் தொகுதி அல்லது நாடாளுமன்ற தொகுதியை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் ஒரு படிவம் வரும். அதில் உங்கள் பெயர், முகவரி, வயது, மொபைல் எண், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், புகைப்படத்துடன் கூடிய அரசு அடையாள ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட விபரங்கள் கேட்கப்படும். குறிப்பாக புகைப்படத்தையும், அடையாளச் சான்றையும் மைக்ரோசாப்ட் லென்ஸ் போன்ற செயலியில் ஸ்கேன் செய்து அதில் பதிவேற்றம் செய்யலாம்.

விண்ணப்பத்தில் விபரங்களை பூர்த்தி செய்யும் இடத்தில் சிவப்பு நிற ஸ்டார் குறியீடு இருந்தால் அதை கட்டாயமாக பூர்த்தி செய்ய வேண்டும். ஸ்டார் குறியீடு இல்லை என்றால் அதை பூர்த்தி செய்வதும் செய்யாததும் நமது விருப்பம். அனைத்து விவரங்களையும் கொடுத்த பின்னர், Submit என்ற பட்டனை கிளிக் செய்யவும். உடனே நீங்கள் விண்ணப்பத்தில் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஒரு ரெபரன்ஸ் எண் வரும். அந்த எண்ணை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். சில நாட்கள் கழித்து உங்கள் விண்ணப்பங்களின் நிலை அறிந்திட அதே இணையதளத்திற்கு சென்று இந்த ரெபரன்ஸ் எண்ணை கொடுத்தால் காட்டும்.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பிறப்புச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு ஆகிய அடையாள சான்றிதழ்கள், ரேஷன் கார்டு அல்லது பாஸ்போர்ட் அல்லது டிஎல் அல்லது பயன்பாட்டு பில் ஆகிய முகவரிச் சான்றிதழ்கள் அவசியம். ஆதார் அட்டையும் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. எனவே இந்த விண்ணப்பத்துக்கான சான்றுக்காக ஆதார் எண் அல்லது அட்டை கேட்கப்பட்டாலும் நீங்கள் அது இல்லாமலேயே விண்ணப்பிக்கலாம்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications