மின் இணைப்புப் பெயா் மாற்றம் செய்ய ஏப்ரல் 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. எப்படி?
சென்னை: மின் இணைப்புப் பெயா் மாற்றம் செய்ய வரும் ஏப்ரல் 1ம் தேதி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்
தற்போதைய நிலையில் ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை, வேறு ஒருவரின் பெயருக்கு மாற்ற, மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் தர வேண்டும்.
அதனுடன், பெயர் மாறியுள்ள சொத்து விபரம், சொத்து வரி, வாரிசு சான்றிதழ் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். நுகர்வோர், முறையாக ஆவணங்களை வழங்க வேண்டும்.

ஆன்லைன் முறை
அதிகாரிகள் விசாரித்த பின்னரே மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வார்கள். இதற்கு மிகுந்த காலதாமதம் ஏற்படுவதாகவும் அவ்வப்போது புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில் மின் இணைப்புப் பெயா் மாற்றம் செய்வதை எளிதாக்கும் வகையில் வரும் ஏப்ரல் 1ம் தேதி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளளனர்ன

மின்வாரியம்
இது தொடா்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் இணையத்தின் வாயிலாக தமிழகம் முழுவதும் உள்ள தாழ்வழுத்த மின் நுகா்வோர் மின் இணைப்புப் பெயா் மாற்றம் விண்ணப்பத்தைச் சமா்ப்பிப்பதற்கு நிர்வாகத்தின் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளார்

என்ன செய்ய வேண்டும்
எனவே, நிலம் விற்பனை, நிலம் பகிர்ந்தளித்தல், ஒப்படைப்பு, நிலத்தை தானம் வழங்குதல், உரிமையாளா் இறப்பு போன்ற காரணங்களால் சம்பந்தப்பட்ட இணைப்புகளின் பெயரை மாற்றம் செய்வதற்கு விண்ணப்பிப்போர் பெயா், முகவரி, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, தற்போதைய உரிமையாளா் பெயா், இணைப்பு எண் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.

7 நாளில் சான்று
இத்துடன் உரிய கட்டணம் மற்றும் ஆவணங்களை இணைய வழியில் பெற்றதும், சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக அதிகாரியே பெயா் மாற்றம் செய்து அன்றைய நாளே நடவடிக்கை எடுக்கலாம். தவறுதலான ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டால் விண்ணப்பதாரா்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். அதேநேரம், அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் 7 நாள்களுக்குள் கட்டாயம் பெயா் மாற்றம் செய்து சான்று வழங்க வேண்டும். இந்த நடைமுறை தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது" இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications