தனிக்குடித்தனத்துக்கு மறுத்த காதல் மனைவி, தொண்டையில் குத்திக் கொன்ற கணவன்
சென்னை: மாமியார் வீட்டில் இருக்க பிடிக்காத கணவன், மனைவி தனிக்குடித்தனம் வருமாறு அழைத்த போது ஏற்பட்ட தகராறில், காதல் மனைவியை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். சென்னை கே.கே.நகரில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு நிலவியது.
சென்னை கே.கே.நகர் நெசப்பாக்கம் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார்.
இவர் சந்தியா (20) என்பரை காதலித்து வந்த நிலையில், கடந்த 3 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்த கொண்டார்.

மாமியார் வீடு
காதல் திருமணம் செய்த போதே சந்தியா தனது கணவர் அருண்குமாரிடம் என், அப்பா, அம்மா நம்முடன் வசிப்பார்கள் என தெளிவாக கூறியுள்ளார். இதற்கு அப்போது அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதன்படி எல்லோரும் ஒரே வீட்டில் வசித்துள்ளார்கள்.

வாடகைக்கு வீடு
3 மாதம் காதல் மனைவி மற்றும் அவரது பெற்றோருடன் சேர்ந்து வசித்த அருண்குமாருக்கு சந்தியாவின் பெற்றோர் உடன் வசிப்பது பிடிக்காமல் இருந்துள்ளது. இதனால் வாடகைக்கு அருண்குமார் தனியாக வீடு பார்த்து வந்துள்ளார்.

வாடகைக்கு வீடு
3 மாதம் காதல் மனைவி மற்றும் அவரது பெற்றோருடன் சேர்ந்து வசித்த அருண்குமாருக்கு சந்தியாவின் பெற்றோர் உடன் வசிப்பது பிடிக்காமல் இருந்துள்ளது. இதனால் வாடகைக்கு அருண்குமார் தனியாக வீடு பார்த்து வந்துள்ளார்.

புதுவீடு
இந்நிலையில் அருண்குமார் ராமாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு பார்த்துள்ளார். அந்த வீட்டில் காதல் மனைவி சந்தியாவுடன் வசிக்க விருப்பமில்லை என்று, அவரிடம் தனது விருப்பத்தை கூறியுள்ளார். மேலும் தனியாக வீடு பார்த்த விஷயத்தையும் கூறியுள்ளார். ஆனால் சந்தியா, பெற்றோரை விட்டு தனிக்குடித்தனம் செல்ல விரும்பவில்லை என கூறப்படுகிறது.

கொலை செய்த கணவன்
நேற்று (சனிக்கிழமை) காலை, சந்தியா மற்றும் அருண் குமார் இடையே தனிக்குடித்தன விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென ஆத்திரமடைந்த அருண்குமார், மனைவி சந்தியாவின் தொண்டையில் கத்தியால் குத்தியுள்ளார். தடுக்க வந்த மாமியார் சரிதாவையும் கையில் அவர் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் தாய் மகள் இருவரும் சரிந்தனர். இதையடுத்து அங்கிருந்து அருண்குமார் தப்பிவிட்டார்.

மனைவி சாவு
இந்நிலையில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். சந்தியா மற்றும் அவரது தாயார் சரிதா ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாய் சரிதாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கணவன் கைது
இந்த சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அருண்குமாரை கைது செய்தனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், காதல் மனைவி சந்தியா, தனது தாய் , தந்தையைவிட்டு வர மறுத்ததும் அதற்காக அவர் ஆத்திரத்தில் கொலை செய்தது தெரியவந்தது. காதல் மனைவியை கணவனே 3 மாதத்தில் கொலை செய்த சம்பவம் கே.கே.நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications