கால் மரத்து போகுதுங்க.. சட்டென கோர்ட்டில் சொன்ன செந்தில் பாலாஜி.. நீதிபதி கேட்ட கேள்வி.. பரபரப்பு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை வழங்கியது. இந்த வழக்கில் நேற்று நேரில் ஆஜரான அமைச்சர் செந்தில் பாலாஜி கோர்ட்டில் சொன்ன சில விஷயங்கள் கவனம் பெற்றுள்ளன.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கில் ஜூன் 14ல் கைதான செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 150 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை, 3 ஆயிரம் பக்கத்திலான ஆவணங்களை டிரங்கு பெட்டியில் கொண்டு வந்து அமலாக்கத்தையினர் தாக்கல் செய்தனர்.

அவரது நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்ததையடுத்து புழல் சிறையிலிருந்து அழைத்துவரப்பட்ட செந்தில்பாலாஜி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
நேற்று கோர்ட்டில் ஆஜரான செந்தில் பாலாஜி மிகவும் கலைந்த முகத்துடன் காணப்பட்டார். கடந்த முறை நீண்ட தாடியுடன் காணப்பட்டவர் இந்த முறை அதை ஷேவ் செய்து இருந்தார். அவர் முன்பை விட எடை குறைந்து ஒல்லியாக காணப்பட்டார். எப்போதும் செந்தில் பாலாஜி சுறுசுறுப்பாக இருக்க கூடியவர்.
செந்தில் பாலாஜி தோற்றம்; ஆனால் நேற்று செந்தில் பாலாஜி ஆள் அடையாளமே தெரியாமல் காணப்பட்டார் . பின்னர், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். நேற்று விசாரணையில் அடுத்த முறை நேரில் ஆஜராக தேவையில்லை, காணொலியில் ஆஜரானால் போதும் என்று கோர்ட் செந்தில் பாலாஜியிடம் தெரிவித்தது.
கால் மரத்து போகுது: நேற்று செந்தில் பாலாஜியின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று நீதிபதி கேட்டுள்ளார். அதற்கு.. எனக்கு கால் மரத்து போகிறது. சோர்வாக இருக்கிறேன் என்று செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இதையடுத்து தொடர்ந்து ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செந்தில்பாலாஜி தரப்பில் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்பதால், அதற்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தினார்.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த 150 பக்க குற்றபத்திரிகை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் வழங்கப்பட்டது. அடுத்தமுறை காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜர்படுத்த தேவையில்லை என்றும், காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தினால் போதுமென சிறைத் துறைக்கு நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு பின்னணி: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விடுவதாக இல்லை என்றே தோன்றுகிறது. இந்திய வரலாற்றில் அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கப்பட்டவர்களில் அதிக கண்டிப்புடன் விசாரிக்கப்பட்டவர் செந்தில் பாலாஜிதான் என்று சொல்லும் அளவிற்கு இந்த விசாரணை நடக்கிறது.
அவர் வீட்டில் ரெய்டு நடத்தியது தொடங்கி அவரை கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறை காட்டிய தீவிரம் வரை இதற்கு உதாரணம். இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை 5 நாட்கள் விசாரணை செய்தது. அவரிடம் விடாமல் அமலாக்கத்துறை தீவிர விசாரணைகளை மேற்கொண்டது. இந்த விசாரணையின் அறிக்கை ஏற்கனவே கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications