பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்
சென்னை: தூத்துக்குடி மண்ணிற்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கின்றது அதனால் தான் தூத்துக்குடியில் போட்டியிடுகின்றேன் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்டெர்லைட் குறித்தான தங்களது நிலைப்பாடு குறித்து தேர்தல் அறிக்கையில் திமுக குறிப்பிடாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள அவர்,
ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகின்றது என்று குற்றம் சாட்டினார்.
பாஜகவிற்கு தமிழகத்திலும் ஆதரவு இருக்கிறது என நம்புகிறேன் என்றும், மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு வரவே மக்களவை தேர்தலில் போட்டியிடுவதாக விளக்கம் அளித்துள்ளார்.
திமுக வெற்றி பெற்றுவிட்டால்... பொய் வழக்குகள் போட்டு துன்புறுத்துவார்கள்... அமைச்சர் தங்கமணி பேச்சு
இதற்கிடையே, நான் பாஜகவில் சேர்ந்ததால் என் அப்பா 6 மாதங்கள் என்னிடம் பேசாமல் இருந்தது இன்றும் மாறாத வடுவாக, மிகப்பெரிய காயமாக இருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் உருக்கமாக தெரிவித்தார்.