EXCLUSIVE: எல்லோரும் நல்லாருக்கணும்.. என் முடிவில் மாற்றமில்லை.. கே.பாக்யராஜ் திட்டவட்டம்
ராஜினாமா செய்தது செய்ததுதான் என இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: "நான் ராஜினாமா செய்தது செய்ததுதான்... அதை திரும்ப பெற மாட்டேன்.. சங்கத்தில் எல்லோரும் நல்லா வரணும்" என்று இறுதி முடிவை சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாக்யராஜ்.
சர்கார் பட விவகாரம் தொடர்பாக திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக இன்று காலை கே.பாக்யராஜ் அறிவித்திருந்தார். இதுகுறித்து தனது நீண்ட விளக்கத்தையும் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார். அதில் குறிப்பாக, சர்கார் பிரச்சனையில் பல அசௌகரியங்கள் நான் சந்திக்க வேண்டி வந்தது.

திடீர் ராஜினாமா
அதுக்கு முக்கிய காரணும்னு நான் நினைக்கிறது தேர்தல்ல நின்னு நேரடியா ஜெயிக்காம நான் நேரடியாக தலைவர் பொறுப்புக்கு வந்ததுதான்னு நினைக்கிறேன்" என்றும் தெரிவித்திருந்தார். பாக்யராஜின் இந்த திடீர் ராஜினாமா சிறிது நேரத்திற்கெல்லாம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இதனை தொடர்ந்து, அவரது ராஜினாமா குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோஜ் அறிக்கை வெளியிட்டார்.

தொடர வேண்டும்
அதில், "தாங்கள் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கொடுத்த கடிதத்தை அனைத்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்தபோது அனைவரும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர் என்றும், பாக்யராஜ்தான் தலைவராகத் தொடர வேண்டும் என்று செயற்குழுவின் தீர்மானமாக எடுக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார். எனவே எப்போதும் போல பாக்யராஜே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக தொடர வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார்.

ஒன் இந்தியா தமிழ்
இப்படி ஒரே நாளில் பாக்யராஜின் ராஜினாமாவும், அதனை ஏற்க மறுத்த விவகாரமும் கலந்து தமிழ் சினிமாவை கலங்கடித்து வருகிறது. திடீர் ராஜினாமா குறித்து "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக பாக்யராஜிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், "நான் ஏற்கனவே முடிவு பண்ணி ராஜினாமா கடிதம் கொடுத்துட்டு வந்துட்டேன்.

நல்லா இருக்கணும்
அதில் எந்தவித மாற்றமும் இல்லை. நான் என்ன காரணம் சொல்லி ராஜினாமா செய்தேனோ அதிலேயே இன்னமும் உறுதியாகத்தான் உள்ளேன் என்றார். ஆனால் தங்களின் ராஜினாமா கடிதத்தை சங்கத்தின் சார்பில் ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, "இல்லை.. வேண்டாம்.. சங்கம் நல்லபடியா இருக்கணும்... சங்கத்தில் எல்லோருக்குமே நல்லது நடக்கணும். அதுவே எனக்கு போதும்". இவ்வாறு பாக்யராஜ் தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications