தடையாக இருந்தால் பதவி விலகவும் தயார்.. மக்கள் பாதை இயக்க விழாவில் சகாயம் ஐஏஏஸ் பரபரப்பு பேச்சு
Recommended Video
சென்னை: பதவி உள்பட எது தடையாக வந்தாலும் அதை விட்டுவிட்டு சமூக மாற்றத்திற்க்காக பணியாற்றுவேன் என சகாயம் ஐஏஎஸ் மக்கள் பாதை இயக்கத்தின் விழாவில் பேசினார்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் அரங் கில் மக்கள் பாதை இயக்கத்தின் சார்பில் நேர்மையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சகாயம் ஐஏஎஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொது வாழ்வில் நிகரற்ற நேர்மையாளருக்கான விருதானது நல்லகண்ணு உள்பட 8 பேருக்கு வழங்கி கௌரவபடுத்தப்பட்டது.

அமீர் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், அமீர், சட்ட பஞ்சாயத்து இயக்கம் செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர்கள், மற்றும் இளைஞர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

மக்கள் பாதை இளைஞர்கள்
இந்த விழா மேடையில் சகாயம் ஐஏஎஸ் பேசுகையில், "லஞ்சமும் ஊழலும் மாற்றப்பட வேண்டும் என சொன்னால் அது சமூகத்தில் இருந்தே உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு சமூக மாற்றத்தை உண்டாக்கும் ஆற்றல் மக்கள் பாதை இளைஞர்களுக்கு இருக்கிறது.

காலம் நிச்சயம் வரும்
என்னை இந்த சமூகம் தான் ஆளாக்கி அகிலத்திற்கு அறிமுகப்படுத்தியது.எனவே இந்த தமிழ் சமூகத்திற்க்கு திருப்பி கொடுக்க நான் கடமைப்பட்டவன். அந்த காலம் நிச்சயம் வரும்.
ஊழல் என்பது ஏழைகளுக்கு எதிரானது. அது நாட்டின் வளர்ச்சிக்கு தடையானது. மானுட பண்பாட்டிற்கு எதிரானது. இது ஓர் குற்றம்.

நேர்மையானவர்கள்
நாம் ஒவ்வொரு மாவட்டத்திலே இருக்கும் அனைத்து நேர்மையானவர்களை கண்டுபிடித்து அவர்களின் பதிவை சமூக வளைதளங்களில் பதிவிட வேண்டும். நிச்சயமாக நாளைய சமூகத்தின் மாற்றம் நம்மால் தான் நடைபெற இருக்கிறது. அப்படிப்பட்ட மாற்றத்திற்கு பதவி உட்பட எது தடையாக வந்தாலும் அதை விட்டு தான் சமூக மாற்றத்திற்காக பணியாற்றுவேன்" என தெரிவித்தார்.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications