மாஸ்டர்மைண்ட்.. தமிழ்நாட்டின் முக்கியமான ஐஏஎஸ் அதிகாரியை.. டெல்லிக்கு மாற்றிய அமித் ஷா! ஏன்?
சென்னை: தமிழ்நாட்டின் முக்கியமான ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான அன்சுல் மிஸ்ரா திடீரென மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். சமீபத்தில் இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (CDMA) முன்னாள் உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்காக அவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதற்காக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தற்போது தமிழ்நாடு அரசின் வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குநராக இருக்கிறார் அன்சுல் மிஸ்ரா. அவர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அமித் ஷாவின் கீழ் உள்ள உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டின் முக்கியமான ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான அன்சுல் மிஸ்ரா பல்வேறு பொறுப்புகளை வகித்து இருக்கிறார். நீண்ட அனுபவம் கொண்ட இவர் பல துறைகளில் மாஸ்டார்மைண்டாக பார்க்கப்படுகிறார். அன்ஷுல் மிஸ்ரா, 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரி ஆவார், நகர்ப்புற நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களில் விரிவான அனுபவத்திற்காக அறியப்படுகிறார். தனது வாழ்க்கையில், அவர் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்:
திருவண்ணாமலை, மதுரை மாவட்ட ஆட்சியாராக இருந்துள்ளார். மதுரையில் கிரானைட் முறைகேடுகளை கையில் எடுத்ததால் 20 ஆண்டுகளுக்கு முன் இதேபோல் ஒரு முறை மத்திய அரசு பணிக்கு இவர் மாற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
வழக்கு பின்னணி
சிஎம்டிஏ வழக்குதான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக லலிதாம்பாள் மற்றும் அவரது சகோதரர் விஸ்வநாதன் ஆகியோருக்கு சொந்தமான 17 சென்ட் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1983 ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. ஆனால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படாததால் அந்த நிலத்தை தங்களிடமே திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2003 ஆம் ஆண்டு லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவு பிறப்பித்தது. அதன்படி 10.5 சென்ட் நிலத்தை திருப்பிக் கொடுத்த நிலையில் 6.5 சென்ட் நிலத்தை சாலை விரிவாக்கத்திற்கு தேவை என கூறி, வீட்டு வசதி வாரியம் தன் வசம் வைத்துக் கொண்டது.
அந்த நிலமும் உரிய காரணத்திற்கு பயன்படுத்தாததால் திருப்பி தரக்கோரி அளிக்கப்பட்ட மனுவை பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரித்து 2 மாதங்களில் சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (CDMA) முன்னாள் உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, மேற்கண்ட நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்காக அவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications