ஜெ. மரண அறிக்கை.. பட்டாசு கடைகளில் ஜெ ராதாகிருஷ்ணன்.. மக்கள் என்ன செய்தனர் தெரியுமா?
சென்னை: சென்னையில் பட்டாசு கடைகளில் கூட்டுறவு துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ஜெ ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் எந்த துறையில் இருந்தாலும் அதில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் செய்பவர். சுனாமி வந்த போது ஜெ ராதாகிருஷ்ணன் நாகை, கடலூர் மாவட்டங்களில் செய்த செயல்கள் அளப்பறியது.
தமிழகத்தை கொரோனா தொற்றிக் கொண்ட போதும் இவர் இரவு பகல் பாராமல் விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் கூட்டம் உள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தி பம்பரமாக சுழன்றவர். நாகையில் சுனாமியின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளை காப்பகத்தில் சேர்த்து வைத்து அவர்களுக்கான தேவைகளை இன்று வரை தகப்பன் ஸ்தானத்தில் இருந்து பூர்த்தி செய்து வருகிறார்.

கூட்டுறவுத் துறை
இந்த நிலையில் இவர் திடீரென கூட்டுறவுத் துறை செயலாளராக மாற்றப்பட்டார். அங்கும் இவர் அதிரடிகளை காட்டினார். அவ்வப்போது ரேஷன் கடைகளுக்கு சென்று ஆய்வு நடத்துவது, பொருட்கள் தரமாக இருக்கிறதா என பரிசோதிப்பது போன்ற செயல்களை செய்தார்.

ஜெயலலிதா மரணம்
இந்த நிலையில் தற்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், டாக்டர் சிவக்குமார், ஜெ ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகிய 4 பேர் குற்றம் செய்தவர்களாக அறிவிக்கப்பட்டது.

தலைமை செயலாளர் உத்தரவு
இவர்கள் மீது விசாரணை நடத்தவும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜெ ராதாகிருஷ்ணனிடம் ஆணையம் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஜெயலலிதாவை ஏன் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.

வெளிநாட்டுக்கு ஜெ அழைத்துசெல்லவில்லை
அதற்கு அவர் அது போல் வெளிநாட்டிற்கு அழைத்து சென்றால் இந்திய மருத்துவர்களை அவமதிக்கும் செயல் என்பதால் வெளிநாட்டுக்கு அழைத்து செல்வது குறித்து அமைச்சரவையில் நான் தெரிவிக்கவில்லை என கூறியிருந்தார். ஐஏஎஸ் அதிகாரியின் இந்த பதில் அதிரவைத்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது.

கால்நடை மருத்துவர்
மேலும் கால்நடை மருத்துவரான ராதாகிருஷ்ணனை தகுதியின் பெயரில் மருத்துவர் என அழைப்பது உகந்தது அல்ல என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கூட்டுறவுத் துறை செயலாளரான ராதாகிருஷ்ணன் தேனாம்பேட்டையில் உள்ள பட்டாசுக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

பொதுமக்கள் மகிழ்ச்சி
அப்போது அவரை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி பொங்க கைகுலுக்கி சார் ஹேப்பி தீபாவளி என்றனர். மேலும் குடும்பம் குடும்பமாக அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சிலர் அவர் கைகளால் பட்டாசு பெட்டிகளை வாங்கிச் சென்றனர். பொதுமக்களின் இந்த உற்சாக வரவேற்பால் ராதாகிருஷ்ணன் மகிழ்ச்சி அடைந்தார். அங்கு வந்த குழந்தைகளிடம் என்ன வகுப்பு என கேட்டதுடன் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications