தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! மருத்துவ துறை செயலாளராக சுப்ரியா சாஹு நியமனம்! அப்போ ககன்தீப்?
சென்னை: தமிழகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் வனத் துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மருத்துவத் துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். அது போல் வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு மருத்துவத் துறை செயலாளராக மாற்றப்பட்டார்.

அது போல் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வித் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை முதன்மை செயலாளராக சந்திர மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீர்வளத் துறை கூடுதல் செயலாளராக இருந்த சாக்சேனா செய்தி மற்றும் அச்சு காகிதத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மணிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் வனத்துறை முதன்மை செயலாளராக செந்தில் குமாரும் பொதுப் பணித் துறை கூடுதல் செயலாளராக மங்கத் ராம் சர்மாவும் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராகவும் ஜான் லூயிஸும் அரசு கேபிள் மேலாண்மை இயக்குநராக வைத்தியநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications