கிரேனில் தூக்கிய போது சரிந்து விழுந்த விநாயகர் சிலை! சென்னையில் திடீர் பரபரப்பு.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை பாலவாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டு வந்தது. அப்போது 500 கிலோவிற்கும் மேல் எடை கொண்ட விநாயகர் சிலை ஒன்றை கிரேன் மூலம் தூக்கிய போது அது கீழே விழுந்து சேதமடைந்தது. போலீசார் அவசரம் காட்டியதான் காரணமாகவே இப்படி நிகழ்ந்தது என்று காவல்துறையினருடன் சிலையை எடுத்து வந்த பொறுப்பாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7 ம் தேதி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, தமிழகம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். சென்னையில் மட்டும் பல்வேறு இடங்களில் 1,524 சிலைகள் வைக்கப்பட்டிருந்தது.

விநாயகர் சிலைகளுக்கு கடந்த ஒரு வாரமாக பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க 3 நாட்கள் காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, கடந்த 11 ஆம் தேதியும் 14 ஆம் தேதியும் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் கோலாகலமாக இன்று நடைபெற்றது.
காலை 10 மணியில் இருந்தே விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைத்தனர்.
விநாயகர் சிலைகளுக்கு முன்னும், பின்னும் ஏராளமான பக்தர்கள் மேள தாளத்துடன் வந்தனர். சின்ன, சின்ன சிறிய சிலைகளில் ஆரம்பித்து இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, பாரத் இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான விநாயகர் சிலைகளும் கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டது.
சென்னையில் மட்டும் சுமார் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சிலைகளை கரைக்க போலீசார் அனுமதி அளித்திருந்த பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, காசிமேடு, திருவொற்றியூர், நீலாங்கரை 4 இடங்களிலும் அணி அணியாக விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டன. இதற்காக கடற்கரை பகுதிகளில் பெரிய விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கிரேன் மற்றும் டிராலி வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.
கிரேன் மூலம் விநாயகர் சிலைகள் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டபோது, பாதுகாப்பு கருதி சிலை அருகே யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே பாலவாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டு வந்தது. அப்போது 500 கிலோவிற்கும் மேல் எடை கொண்ட விநாயகர் சிலை ஒன்றை கிரேன் மூலம் தூக்கி கடலில் கரைக்கும் பணி நடைபெற்றது. லாரியில் இருந்து விநாயகர் சிலையை தூக்கும் போது அதிக எடை காரணமாக விநாயகர் சிலை கீழெ விழுந்தது உடைந்தது.
இதனால், காவல்துறையிறனருடன் சிலையை எடுத்து வந்த பொறுப்பாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவசரப்படுத்தியதே இதுபொன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். விநாயகர் சிலை கிழே விழுந்து உடைந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு!












Click it and Unblock the Notifications