சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடியார் மீண்டும் வந்தால்.. தமிழகம் பின்லாந்து மாதிரி சொர்க்கபூமியாகும்.. சொல்றது ராமதாஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் மக்கள் மனதில் எப்படியாவது இடம் பெற்று விட வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளும் தமிழகத்தை ஒரு ரவுண்ட் அடித்து வருகின்றனர்.

If Edappadi Palanisamy comes power again, Tamil Nadu will be a paradise says said Ramadas

இந்த நிலையில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கும்மிடிப்பூண்டியில் உள்ள தண்டலம் பகுதியில் பா.ம.க வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- நார்வே, சுவீடன், பின்லாந்து உள்ளிட்ட நாடுகள் கல்வி, மருத்துவத்தில் மிகவும் சிறந்து விளங்கும் நாடுகளாகும்.

If Edappadi Palanisamy comes power again, Tamil Nadu will be a paradise says said Ramadas

அத்துடன், மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலிலும் இடம் பிடித்து அந்த நாடுகள் சொர்க்க பூமியாக திகழ்கின்றன . இதேபோன்று தமிழகமும் சொர்க்க பூமியமாக மாற வேண்டும் என்றால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்தார்.

If Edappadi Palanisamy comes power again, Tamil Nadu will be a paradise says said Ramadas

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் போட்டியிடும் பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு ஆதரவாக அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக ஆட்சியில் தமிழகம் சிறப்பான வரள்ச்சி கண்டுள்ளது. ஆனால் திமுகவுக்கு வாக்களித்தால் தமிழகம் பின்னோக்கி சென்று விடும். திமுகவுக்கு வாக்களித்தால், மாநில வளர்ச்சி கேள்விக்குறியாகும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

English summary
If Edappadi Palanisamy comes again, Tamil Nadu will be a Finnish model paradise, said Ramadas
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X