எல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.? முதல்வர் கேள்வி
சென்னை: உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளிடம் பேச்சு நடத்தி சுமூக சூழலை ஏற்படுத்த, தமிழக எம்பி-க்கள் நடவடிக்கை வேண்டும் என முதல்வர் சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.
இவ்விகாரத்தில் விவசாயிகளை திமுக எம்பி-க்கள் போராட்டம் செய்வதற்கு தூண்டி விடுவதாக, அமைச்சர் தங்கமணி கூறியதற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இலங்கைக்கு கடலுக்கு அடியில் மின்சாரம் கொண்டு செல்வதாகவும், அது போல பூமிக்கடியில் மின்சார கேபிள்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறும் ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன் கேட்டு கொண்டதை குறிப்பிட்டு அமைச்சர் தங்கமணி பேசினார்.
மதுரையிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் கொண்டு செல்வதற்கு கடலுக்கு கீழே கேபிள் பதிப்பதற்கு, 7 மடங்கு செலவு அதிகமாவதாக அவர் கூறினார். இதனால் உயர்மின் கோபுரம் அமைத்து தான் கொண்டு செல்ல முடியும் என கூறினார்.
இச்சூழலில் தமிழகத்தில் வரும் மின்சாரத்திற்கு உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என, திமுக எம்பி-க்கள் சிலர் விவசாயிகளை தூண்டி விடுவதாக அமைச்சர் புகார் தெரிவித்தார்.
திமுக எம்பி-க்களை தரக்குறைவாக பேசியதாக கூறி அக்கட்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி எதிர்ப்பு தெரிவித்தார்.பதிலுக்கு அதிமுக உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்டு பேசிய ஸ்டாலின், திமுக-வினர் தூண்டி விடுவதாக கூறுவதை விட்டு போராடும் மக்களை சமாதானப்படுத்துங்கள் என்றார்.
அப்போது பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி நாடாளுமன்ற எம்பி ஒருவர் டியூப்லைட்டுடன் போராட்டம் நடத்தினால், மக்கள் பயப்பட மாட்டார்களா என வினவினார். மேலும் எல்லா திட்டங்களையுமே இப்படி எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும் என்றார்.
போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுடன் பேசி தமிழக எம்பிக்கள் பிரச்சனைக்கு சுமூக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications