புது தலை வருகிறாராம்! தொங்கு நாடாளுமன்றம் வந்தால்.. மோடிக்கு பதில் ஆர்எஸ்எஸ் கொண்டு வரும் புது முகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் ஒருவேளை பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்டிஏ ஆட்சிதான் அமைக்க வேண்டும் அல்லது தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டு வெளியே உள்ள கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நிலை வந்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாக மோடிக்கு பதிலாக வேறு ஒரு முகம் முன்னிறுத்தப்படலாம் என்கிறார்கள்.

2024 லோக்சபா தேர்தலில் பாஜக பெரும்பாலும் 300+ இடங்களை வெல்லும் என்று தேர்தல் கணிப்புகள் சொல்கின்றன. சில கணிப்புகள் என்டிஏ கூட்டணிக்கு 370 இடங்கள் கூட கிடைக்கும் என்று கணித்து உள்ளன. 3 கணிப்புகளை தவிர மற்ற எல்லா கணிப்புகளும் பாஜக ஆட்சியை உறுதி செய்கின்றன. கணிப்புகள் உண்மையாகும் பட்சத்தில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமர் ஆக பதவி ஏற்பார்.

lok sabha election 2024 narendra modi bjp 2024

இப்படி 2024 லோக்சபா தேர்தலில் எக்சிட் போல் கணிப்புகள் பலவும் பாஜகவிற்கு ஆதரவாக வந்துள்ளன. ஆனால் இன்னமும் பாஜக கேம்பில் இது குஷியை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் கணிப்புகள் சாதகமாக வந்து.. 2004 போல ட்விஸ்ட் ஆகி வாஜ்பாய் ஆட்சி போல பாஜக தோல்வி அடையும் வாய்ப்புகளும் உள்ளன.

ஆர்எஸ்எஸ் திட்டம்: முக்கியமாக பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைப்பது பற்றி ஆர்எஸ்எஸ் அமைப்பே சந்தேகம் கொள்கிறதாம். அதாவது பாஜக தனியாக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை.. என்டிஏ ஆதரவுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக ஆர்எஸ்எஸ் நம்புகிறதாம். என்டிஏ ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பாஜகவிற்குள் பல உள் வேலைகளை பார்க்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளதாம்.

2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத பட்சத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பாஜக ஆட்சியில் கடுமையான தலையீடுகளை செய்யும் என்று அந்த அமைப்பின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

திட்டம் என்ன?: அதன்படி மோடிக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த பிரகலாத் ஜோஷியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த ஆர்எஸ்எஸ் நினைக்கிறதாம். பிரகலாத ஜோஷி கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், 2009, 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் தார்வாடு மக்களவைத் தொகுதிலிருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினரும் ஆவார்.

இவர் தீவிரமான ஆர்எஸ்எஸ் நிர்வாகி. ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வந்தவர். பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் இவரை பிரதமராக்க வேண்டும்.. இல்லையென்றால் என்டிஏ கூட்டணியை உடைப்போம்.. என்று ஆர்எஸ்எஸ் வறுபுறுத்த திட்டமிட்டுள்ளதாம்.

ஏன் மோடி வேண்டாம்: ஏற்கனவே குஜராத்தில் பாஜகவிற்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் சரியாக பணிகளை செய்யவில்லை. அப்படி இருக்கத்தான் ஆர்எஸ்எஸ் தரப்பை குஷிப்படுத்த மோடி தனது பிரச்சார யுக்தியை மாற்ற தொடங்கினார். உதாரணமாக இஸ்லாமியர்களை தாக்கி கடுமையாக பேசினார். சில மேடைகளில் இஸ்லாமிய இடஒதுக்கீடு, தாலி பறிப்பு பற்றி எல்லாம் மோடி பேசினார். இதெல்லாம் தேர்தலில் பணிகளை செய்யாத ஆர்எஸ்எஸ் தலைவர்களை உற்சாகப்படுத்த மோடி களமிறங்கிய யுக்தி என்று கூறப்பட்டது.

ஆனால் ஆர்எஸ்எஸ் எதற்கும் தலை அசைக்கவில்லை. பாஜக தேர்தல்களில் வெற்றிபெற முக்கிய காரணம் பாஜக பிரச்சாரம் + ஆர்எஸ்எஸ் நடத்தும் லோக்கல் பிரச்சாரம். ஆனால் உத்தர பிரதேசத்தில் இந்த முறை பாஜகவிற்கு ஆதரவாக களப்பணிகளை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் செய்யாமல் போக பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அந்த காரணங்களை இங்கே பார்க்கலாம்.

ஆர்எஸ்எஸ் தரப்பு மோடியின் தனிப்பட்ட வளர்ச்சியை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பாஜகவின் ஆர்எஸ்எஸ் குரல் இல்லாமல் போய்விட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு பாஜகவில் எப்போதும் வாய்ஸ் இருக்கும். அது மோடி வருகையால் இல்லாமல் போய்விட்டது. ஆர்எஸ்எஸ் முடிவுகளை மோடி - அமித் ஷா இருவரும் கேட்பது இல்லை. இருவரும் சுயமான முடிவுகளை எடுக்கின்றனர். இப்போது வேட்பாளர் தேர்வில் கூட ஆர்எஸ்எஸ் குரல் கேட்பது இல்லை. இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் அப்செட் ஆகி உள்ளது. இது களப்பிரச்சாரத்திலும் சுணக்கம் ஏற்பட காரணம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+