Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முருகன் தமிழ்க் கடவுள் என்றால் சிவன் யார்? லாஜிக்காக கேட்டால் அவங்களுக்கு கோபம் வருது.. திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முருகன் தமிழ் கடவுள் என்றால், அவரது அப்பா சிவபெருமானும் தமிழ்க் கடவுளாகத் தானே இருக்க முடியும். கைலாயம் தமிழரின் தேசம்தானே.. அப்போ ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழர் தேசியம் தானே.. பார்வதி தமிழச்சி என்றால், மகன் கணபதி கணேசனும் தமிழனாக தானே இருக்க முடியும்.. அப்போது ஏன் கணேசனை யாரும் தமிழ்க் கடவுள் என்று சொல்வதில்லை என திருமாவளவன் பேசியுள்ளார்.

சென்னையில் விசிக சார்பாக விருது விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் முருகன் தமிழ் கடவுள் என்றால் அவரது தந்தை சிவனும் தமிழ் கடவுளாகத்தானே இருக்க முடியும் என்று பேசினார். இது தொடர்பாக திருமாவளவன் பேசியதன் முழு விவரம் வருமாறு:-

if-murugan-is-tamil-god-who-is-shiva-some-get-angry-when-asked-this-says-thol-thirumavalavan

சிவபெருமானே ஒரு சான்று

அதனால் தான் ஒரு கேள்வி எழுப்பினேன்.. இதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முருகன் தமிழ் கடவுள் என்றால், அவரது அப்பா சிவபெருமானும் தமிழ்க் கடவுளாகத் தானே இருக்க முடியும்.. முருகன் தமிழன் என்றால், சிவன் தமிழன் என்றால் பார்வதியும் தமிழச்சியாக தான் இருக்க வேண்டும்.

அப்போ சிவனும், பார்வதியும் கைலாய மலையில் இருக்கிறார்கள் என்றால், கைலாயம் தமிழரின் தேசம்தானே.. அப்போ ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழர் தேசியம் தானே.. எங்கள் தமிழன் சிவபெருமான் கைலாயத்தில் குடியிருக்கிறார் என்றால், கைலாய மலையும் தமிழனுக்கு சொந்தம்.. அப்போ இமயம் முதல் குமரி வரை தமிழன் வாழ்ந்தான் என்பதற்கு சிவபெருமானே ஒரு சான்று.. அந்த கதையின் படி பார்த்தால்..

சிவன் தமிழன்.. பார்வதி தமிழச்சி என்றால், மகன் கணபதி கணேசனும் தமிழனாக தானே இருக்க முடியும்.. அப்போது ஏன் கணேசனை யாரும் தமிழ்க் கடவுள் என்று சொல்வதில்லை. இதையெல்லாம் லாஜிக்காக கேட்டால் அவங்களுக்கு கோபம் வரும்.. இவ்வாறு அவர் பேசினார்.

பூசாரி நெற்றியில் திருநீறு பூசினார்

தொடர்ந்து திருமாவளவன் பேசியதாவது:- நோன்புக்கு போகிறேன். தலையில் தொப்பி வைக்கிறார்கள். அதை எடுக்காமலே இருக்க முடியுமா? அடுத்த நிமிஷமே எடுக்கிறேன். அது அவுங்களுக்கே தெரியும். அப்போது.. பூசாரி நெற்றியில் திருநீறு பூசினார். அவருடைய உனர்வை நான் மதிக்கிறேன். வணக்கம் சொன்னேன். நன்றி சொன்னேன்.

கொஞ்ச நேரம்தானே வச்சிருக்க முடியும். அதை அப்படியே வைத்துக்கொண்டு இருக்க முடியுமா.. புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று நான் பூசிக்கொண்டு இருக்கவில்லை. அவமதிக்க வேண்டும் என்று நான் அழிக்கவில்லை. இது அற்பர்களுக்கு தெரியாது. ஏனெனில் அவர்களுக்கு அரசியல் தெரியாது. என் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் இன்றைக்கு கூட என்னை பல கோயிலுக்கு அழைக்கிறார்கள். நான் போகிறேன்.

இந்து மதத்தில் சகோதரத்துவம் இல்லை

கும்பத்திலே கலசத்திலே தண்ணீர் ஊற்ற சொல்கிறார்கள்.. ஊற்றுகிறேன். இதெல்லாம் 100 வருஷம் வாழனும் என்று ஆசைப்பட்டுத்தான் செய்கிறேனா.. என் தாய் என்னை வீட்டுக்கு வரவேற்கிற போது, ஆரத்தி எடுத்து நெற்றியில் திருநீறு பூசுகிறார். அதை ஏற்றுக்கொள்கிறேன்.

என் தாய்க்கு என்ன மதிப்பு கொடுக்கிறேனோ அப்படித்தான் என் மக்களுக்கும் மதிப்பளிக்கிறேன். அவ்வளவுதான்! நான் மக்கள் மீது கொண்டு இருக்கும் மதிப்பு அது. இந்து மதத்தில் சகோதரத்துவம் இல்லை என்பதை அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது. அதனால்தான் அதை அரசு மதமாக இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+