டாஸ்மாக் பார்களில் இரவு 10 மணிக்கு மேல் மது விற்பனையா? திடீர் சோதனைகள் நடத்த சென்னை ஐகோர்ட் ஆணை!
சென்னை: டாஸ்மாக் பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுகிறதா என கண்டறிய திடீர் சோதனைகளை நடத்த காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் மதுபானம் விற்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் போலீசார் சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்த பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுகிறதா? என திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

சென்னை ஓட்டேரியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை ஒட்டிய பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும், இரவு 10 மணிக்கு மேல் சட்ட விரோதமாக அங்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் கூறி தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுடன் கூட்டு சேர்ந்து பார் உரிமம் பெற்றவர்கள், மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட நேரங்களில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்று வருகின்றனர். இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் புகார்கள் அளித்தும் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்த பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதை தடுக்க தான் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தேவராஜன் தாக்கல் செய்த இந்த பொதுநல மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வு, டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்த பார்களில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்கப்படுகிறதா? என திடீர் சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கும், காவல்துறையினருக்கும் உத்தரவிட்டது.
மேலும், மனுதாரர் தேவராஜின் புகார் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது சென்னை ஐகோர்ட் அமர்வு.
-
ரோடு ஷோ விதிகள்.. தவெக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு 3 வாரம் அவகாசம் வழங்கிய ஐகோர்ட் -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications