டாஸ்மாக் பார்களில் இரவு 10 மணிக்கு மேல் மது விற்பனையா? திடீர் சோதனைகள் நடத்த சென்னை ஐகோர்ட் ஆணை!
சென்னை: டாஸ்மாக் பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுகிறதா என கண்டறிய திடீர் சோதனைகளை நடத்த காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் மதுபானம் விற்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் போலீசார் சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்த பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுகிறதா? என திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

சென்னை ஓட்டேரியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை ஒட்டிய பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும், இரவு 10 மணிக்கு மேல் சட்ட விரோதமாக அங்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் கூறி தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுடன் கூட்டு சேர்ந்து பார் உரிமம் பெற்றவர்கள், மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட நேரங்களில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்று வருகின்றனர். இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் புகார்கள் அளித்தும் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்த பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதை தடுக்க தான் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தேவராஜன் தாக்கல் செய்த இந்த பொதுநல மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வு, டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்த பார்களில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்கப்படுகிறதா? என திடீர் சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கும், காவல்துறையினருக்கும் உத்தரவிட்டது.
மேலும், மனுதாரர் தேவராஜின் புகார் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது சென்னை ஐகோர்ட் அமர்வு.
-
திருச்சி தனியார் மதுக்கடைகளில் டாஸ்மாக் 10 ரூபாய் ஸ்டிக்கர்? துணை சபாநாயகர் ஆய்வில் ட்விஸ்ட் -
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications