சென்னையில் அடுத்த 6 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் முக்கிய அலார்ட்
சென்னை: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் அடுத்த 48 மணிநேரங்களுக்கு சென்னை நகரத்தில் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 28 டிகிரி செல்சியஸ் முதல் மற்றும் 24 டிகிரி செல்சியஸ்க்குள் இருக்கும்.
சென்னை, அதன் அருகில் உள்ள மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களான கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 13 ஆம் தேதியான இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

அடுத்த 6 மணி நேரம்
இந்நிலையில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளளது,

சென்னை காஞ்சி
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு, சேலம் மாவட்டங்களில் 6 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏற்கனவே தீபாவளிக்கு ஊருக்கு போக மக்கள் ஆயத்தமாகி வரும்போது கனமழை பெய்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.

ஞாயிறு அதிகம் பெய்யும்
இதற்கிடையே இன்று மழை அதிகம் பெய்ய வாய்ப்பு இருந்தாலும் தீபாவளி நாளில் மழையின் தீவிரம் குறையக்கூடும் என்றும் ஆனால் மறுநாள் ஞாயிறு அன்று மீண்டும் பலம் பெறக்கூடும் என்றும் தனியார் வானிலை பதிவாளர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் கனமழை
நேற்று முன்தினம் சென்னையின் பல பகுதிகளிலும் புறநகர்ப்பகுதிகளிலும் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்தது நுங்கம்பாக்கத்தில் 18.3 மி.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 15.6 மி.மீ மழையும் காலை 8.30 மணி வரை மழை பெய்தது. அதன்பிறகு காலை முதல் மாலை வரையிலும் தொடர்ச்சியாக அவ்வப்போது கனமழை பெய்தது. நேற்றும் பல இடங்களில் சென்னையில் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் கனமழைக்கு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருப்பது நல்லது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications