Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாரம் 5 நாள் மட்டுமே பணி.. வங்கி ஊழியர்களுக்கு டிசம்பரில் ஹேப்பி நியூஸ்! பணி நேரம் எப்படி இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து உள்ளனர். இந்த கோரிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்து இருக்கிறது. இந்நிலையில் தான் வங்கி பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

நம் நாட்டில் உள்ள வங்கிகளுக்கு அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை தினமாகும். சனிக்கிழமை என்றால் மாதத்தின் முதல் மற்றும் சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படும். 2வது, 4வது வார சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

banks union government holiday


இந்நிலையில் தான் தற்போது பொதுமக்கள் அடிக்கடி வங்கிகளுக்கு செல்வது இல்லை. ஆன்லைன் பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளது தான் இதற்கு முக்கிய காரணமாகும். இந்நிலையில் தான் ஐடி நிறுவனங்களை போல் தங்களுக்கும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி வழங்க வேண்டும். அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வங்கி ஊழியர்களிடம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

இதுதொடர்பாக ஐபிஏ என அழைக்கப்படும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் இடையே கடந்த ஆண்டு டிசம்பரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும் என்பது தான் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சாரம்சமாகும். அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணியாளர்கள் சங்கம் மற்றும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பினர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

வயநாடு தொகுதியில் நடிகை குஷ்பு போட்டி? பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக வியூகம்! பரபர தகவல்

இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் 8 ம்தேதி ஐபிஏ மற்றும் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் 5 நாள் வார விடுமுறைக்கு ஏற்ப திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. அதன்படி வங்கி ஊழியர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழகைளில் விடுமுறை பெற வேண்டும் என்றால் தினமும் கூடுதலாக 40 நிமிடங்கள் பணியாற்ற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

banks union government holiday

இந்த 5 நாள் பணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்ககு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு சார்பில் இன்னும் அனுமதி என்பது வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் தான் மத்திய அரசு சார்பில் டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் ஹேப்பியாகி உள்ளனர். இந்த ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் நாட்டில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பொதுத்துறை வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்.

உட்கார்ந்ததால் வழக்கு.. ஜெயலலிதா விளம்பர செலவை கேட்ட ஆர்டிஐ ஆர்வலர் 10 ஆண்டுக்கு பின் விடுதலை


இந்த 5 நாள் பணி முறை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் வங்கி செயல்படும் நேரம் என்பது மாற்றியமைக்கப்பட உள்ளது. அதாவது பொதுவாக நம் நாட்டில் வங்கிகள் காலை 9.30 மணி முதல் மதியம் 5.30 மணி வரை செயல்படும். 5 நாள் விடுமுறைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் தினமும் காலை 9.30 மணிக்கு பதில் காலை 9 மணிக்கு வங்கிகள் செயல்பட தொடங்கும். மாலை 5.30 மணிக்கு பதில் 5.40 மணி வரை வங்கிகள் செயல்படும். இருப்பினும் மக்களுக்கான சேவை என்பது காலை 10 மணி முதல் 4 மணி வரை மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+