சென்னையில் பரபரப்பு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் உட்பட 4 பேர் விஷம் குடித்து தற்கொலை
சென்னை: சென்னை புறநகர் பகுதியில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, புறநகர் பகுதியிலுள்ள ஆவடி அருகேயுள்ளது அண்ணனூர். இங்கே ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இன்று மாலை விஷம் குடித்து, தற்கொலை செய்ய முயன்றனர். இதில், கோவிந்தசாமி (64), சுப்பம்மாள் (60), நாகராஜ் (35), ரவி (30) ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தனர். கல்யாணி (28) சர்வேஸ்வரி (8) யோகப்பிரியா (6) ஆகிய எஞ்சிய 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஏன் குடும்பத்தோடு தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக, போலீசார் தீவிர விாசரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
Comments
English summary
In Chennai 4 members from a family committed suicide by consuming poison.
Story first published: Saturday, October 12, 2019, 21:10 [IST]