சென்னை மக்களே நோட் பண்ணுங்க.. இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிப்பு
சென்னை: சென்னையில் இன்று (நவம்பர் 28) மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் ஆர்ஏ புரம், ஆர்கே நகர் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னையில் இன்று சில இடங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக மின்சாரம் என்பது தடைப்பட உள்ளது. இதுதொடர்பாக மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் 28.11.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
ஆர்ஏ புரம்: எம்ஆர்சி நகர் பகுதி, பட்டினம்பாக்கம், ஃபோர்ஷோர் எஸ்டேட்டின் ஒரு பகுதி, காந்தி நகரின் ஒரு பகுதி, பிஆர்ஓ குவார்ட்டர்ஸ், ஆர்கே மடம், ஆர்கே நகர், ராணி மெய்யம்மை கோபுரம், சத்தியதேவ் அவென்யூ, ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், எச்டி சர்வீஸ், ராஜா தெரு, ராபர்ட்சன் லேன், ராஜா கிராமணி கார்டன், கேவிபி கார்டன், அப்பா கிராமணி தெரு, வேலாயுதராஜா தெரு, டிபி ஸ்கீம் சாலை, ராஜா முத்தையா புரம், குட்டிகிராமணி தெரு, காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
கஸ்தூரி அவென்யூ, கற்பகம் அவென்யூ, வசந்த் அவென்யூ, சவுத் அவென்யூ, சண்முகபுரம், சாந்தோம் ஹை ரோடு, சத்தியநகர், அறிஞர் அண்ணா நகர், அன்னை தெரசா நகர், பெருமாள் கோவில் தெரு, தெற்கு கால்வாய் வங்கி சாலை உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.
ஆர்கே நகர்: விஓசி நகர், ஆர்கே நகர், திலகர் நகர், எல்லையா முதலி தெரு, சேனியம்மன் கோவில் தெரு, டிஎச் ரோடு பகுதி, டோல்கேட் பகுதி, ஸ்டான்லி, பழைய வண்ணாரப்பேட்டை, கன்னியேகாவில், கல்மண்டபம் ஏரியா, கும்மாளம்மன் கோவில் தெரு, ஜிஏ சாலை, தாண்டவல்லிய கிராமிய கிராமம் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, சஞ்சீவராயன் கோவில் தெரு பகுதி, கப்பபோலு தெர, பாலு முதலி தெரு ஆகிய பகுதிகளில் இன்று மின்சப்ளை இருக்காது.
மேலும் ஜேவி கோவில் தெரு, ராமானுஜ அப்பர் தெரு, பால அருணாசல தெரு, வழக்கறிஞர் சின்னதம்பி I, II தெரு பகுதி, நமச்சிவாய செட்டி தெரு பகுதி, ஜஸ்டிஸ் பந்தலை காலனி தெரு, வெங்கடாசலம் தெரு, தாண்டவராய முதலி தெரு மற்றும் டிஎச் சாலை எஸ்எஸ் பகுதி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications