கருணை காட்டிய வருணபகவான்... சென்னையை குளிர்வித்த மழை.. பரவலாக பெய்ததால் மக்கள் பரவசம்
சென்னை: சென்னையில் சில இடங்களில் இன்று இரவு மழை பெய்தது. அண்ணாநகர், சாலிக்கிராமம், மதுரவாயல், முகப்போர், வளசரவாக்கம், போரூர் உள்பட சில இடங்களில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் பரவசமடைந்தனர்.
Recommended Video
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் துவங்கி உள்ளது. இருப்பினும் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. கோடைக்காலத்தை போல் வெயில் வெளுத்து வாங்குகிறது. இருப்பினும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான தேனி, தென்காசியில் சில இடங்களில் மழை பெய்கிறது.
இதன் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் குறைந்த அளவில் மட்டுமே நேற்று விழுந்தது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இந்நிலையில் ஜூன் 28 ல் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரகை்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஜூன் 29, 30 தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்காலின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் மழை
மேலும் சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் தான் சென்னையில் இன்று இரவு சில இடங்களில் மழை பெய்துள்ளது.

எந்தெந்த இடங்களில் மழை
அதன்படி அண்ணாநகர், திருமங்கலம், அமைந்தகரை, சூளைமேடு, கேகே நகர், வடபழனி, சாலிகிராமம், அசோக்நகர், வரசரவாக்கம், போரூர், மதுரவாயல், முகப்பேர், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. பகலில் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் இரவில் மழை பெய்ததால் மண் குளிர்ச்சியடைந்துள்ளது. பரவலாக பெய்த இந்த மழையால் மக்கள் பரவசமடைந்தனர். இருப்பினும் இந்த மழை தொடர்ந்து சில நாட்கள் பெய்தால் சென்னையில் இதமான சூழல் நிலவும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இதற்கிடையே ஜூன் 29, 30ம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications