Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டுக்குச் சென்று பிரசவம்! செவிலியருக்கு 1 சவரன் தங்கம்! காலத்தால் அழியாத கருணாநிதி சாதனைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு இன்று வலுவாக உள்ளதென்றால் அதற்கு அடித்தளம் போட்டவர் கருணாநிதி என்பது, அவரது நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் இத்தருணத்தில் நினைவு கூறத்தக்கதாகும்.

மகத்தான மருத்துவத்துறைக்கு கருணாநிதி என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை தமிழக அரசு ஒரு பெரிய குறிப்பாகவே விவரித்துள்ளது. அதன் விவரம் வருமாறு;

In Health Dept, Timeless achievements of Karunanidhi!

''சிசு மரணம் ஏற்படுவதற்கான மிக முக்கியமான காரணம் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் வழக்கம்தான். இதற்கு எதிரான பிரச்சாரங்கள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டது என்றாலும், வீட்டுக்கே சென்று பிரசவம் பார்க்கும் முடிவை அரசு எடுத்தது. இதற்காக, வீட்டுக்குச் சென்று பிரசவம் பார்க்கும் செவிலியருக்கு ஊக்கத்தொகை அறிவித்தார் கலைஞர்.''

''அதாவது, ஒவ்வொரு பிரசவத்துக்கும் ஊக்கத்தொகை உண்டு. இதோடு, சிசு மரணம் ஏதும் ஏற்படாமல் சிறப்பாகக் கையாளும் செவிலியருக்கு ஒரு சவரன் தங்கம் பரிசு என்றும் அறிவித்தார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை சிறப்பாகச் செயல்பட்ட அனைவருக்கும் சுழல் கேடயம் வழங்கி ஊக்கப்படுத்தினார் கலைஞர்.''

''பிறகு, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் வழியாக, பெண்கள் ஊட்டச்சத்துமிக்க உணவு எடுத்துக்கொள்ளவும் உடல்நலனை மேம்படுத்திக்கொள்ளவும் நிதியுதவி அளித்தார். பெண்களும் குழந்தைகளும் இதனால் பயன்பெற்றனர்.''

''குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகளை வழங்குவது, கர்ப்பிணிப் பெண்களுக்கு முதன்மை சுகாதார உதவிகளைச் செய்வது, இளம்பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்குவது, கருவுற்ற தாய்மார்களைப் பதிவுசெய்து அவர்களைத் தொடர்ந்து கவனித்துக்கொள்வது, பாலூட்டும் தாய்மார்களுக்கு இணை உணவு வழங்குவது, தாய்-சேய் நல அட்டைகள் வழங்குவது, பிரசவம் பார்ப்பது, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வது, பிறப்பையும் இறப்பையும் உடனடியாகப் பதிவுசெய்வது, அரசின் பல்வேறு திட்டங்களையும் மக்களிடம் கொண்டுசேர்ப்பது என ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணி மிகப் பெரியது. ''

''கலைஞர் முதன்முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது இருந்த ஆரம்ப சுகாதாரங்களின் எண்ணிக்கை வெறும் 300 மட்டுமே. அதை ஆயிரக்கணக்கில் உயர்த்தினார் கலைஞர். இங்கெல்லாம் 24 மணிநேரமும் மருத்துவ உதவி கிடைக்கும்படி செய்தார்.''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+