Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரெட் ஃபிளாக்.. வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்தும்.. இன்னும் refund வரலையா? இதுதான் காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரித்துறை சில ITR refund கோரிக்கைகளை ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளது. குறிப்பாக, அதிக மதிப்புள்ளவை எனக் கருதப்படும் அல்லது குறிப்பிட்ட சலுகைகளைக் கோரும் சந்தேகத்திற்குரியதாகக் குறிக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வால் பணத்தைத் திரும்பப் பெறுவதில் தற்காலிக தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், சட்டபூர்வமான தொகைகள் டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏதேனும் தவறுகளைச் சரிசெய்ய வரி செலுத்துவோர் திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுள்ளோம், என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

income tax ITR

குறைந்த மதிப்புள்ள கோரிக்கைகளுக்கான பணத்தைத் திரும்பப் பெறுதல் ஏற்கனவே வழங்கப்பட்டு வருவதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. குறைந்த மதிப்புள்ள தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சில தவறான கோரிக்கைகள் அல்லது சலுகைகள் கோரப்பட்டதைக் கண்டறிந்துள்ளோம். இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. அதனால் அவரை ரெட் ஃபிளாக் செய்துள்ளோம். அதை ஆய்வு செய்த பின்பே கொடுப்போம் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை ITR - வருமான வரித்துறை

மீதமுள்ள பணத்தைத் திரும்பப் பெறுதல்கள் இம்மாதம் அல்லது டிசம்பருக்குள் வெளியிடப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதிகாரபூர்வ தரவுகளின்படி, ஏப்ரல் 1 முதல் நவம்பர் 10 வரை வழங்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுதல் சுமார் 18 சதவீதம் குறைந்து ரூ. 2.42 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது.

வருமான ரிட்டர்ன் தாக்கல் செய்த பலருக்கும் இன்னும் ரிட்டர்ன் வழங்கப்படவில்லை. வரி திரும்பப்பெறுதலுக்காகக் காத்திருப்பது சில சமயங்களில் மிகுந்த பொறுமையைச் சோதிக்கும். ஆனாலும், தாமதங்களுக்கு அரசு வட்டியுடன் இழப்பீடு வழங்குகிறது என்பது ஆறுதலான செய்தி. இந்த வட்டி விகிதம் நிலையானது மற்றும் மாதந்தோறும் கணக்கிடப்படுகிறது. ஆனால் இதில் சில விதிமுறைகள், வரம்புகள் மற்றும் விலக்குகள் உள்ளன.

செப்டம்பர் 16 அன்று வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. பல வரி செலுத்துவோர் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுவிட்ட நிலையில், சில வரி செலுத்துவோர் தங்கள் வங்கிக் கணக்கையும், வருமான வரி போர்ட்டலையும் தொடர்ந்து சரிபார்த்து வருகின்றனர்.

வருமான வரி

வரி திரும்பப்பெறுதல் தாமதமானால், அரசு வட்டி செலுத்துமா, செலுத்தினால் எவ்வளவு என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இது குறித்து, சிஏக்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சட்டத்தின்படி தாமதமான பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வட்டி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று பொருளாதார வல்லுனர்கள் விளக்கி உள்ளனர். "வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு 244A இன் படி, வரி செலுத்துவோருக்கு ஏதேனும் தொகை திரும்பப்பெறப்பட வேண்டியிருந்தால், ஒவ்வொரு மாதத்திற்கும் அல்லது மாதத்தின் பகுதிக்கும் 0.5% எளிய வட்டிக்கு அவர் தகுதியுடையவர்.

இதன் பொருள், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவது வரி அதிகாரிகளால் தாமதமானால், நீங்கள் ஆண்டுக்கு 6% வட்டி பெறலாம். இது மாதந்தோறும் எளிய வட்டி அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. கூட்டு வட்டியைப் போலல்லாமல், இதில் முன்னர் சம்பாதித்த வட்டிக்கு மேல் வட்டி வளராது.

ஒரு வரி செலுத்துவோருக்கு ரூ. 20,000 திரும்பப்பெறப்பட வேண்டும், அது மூன்று மாதங்கள் தாமதமானால், வட்டி ரூ. 20,000 x 0.5% x 3 = ரூ. 300 ஆக இருக்கும். எனவே, வட்டி கிடைத்தாலும், அது மிதமானதாகவே இருக்கும்.

அனைத்துத் தாமதங்களுக்கும் வட்டி கிடைப்பதில்லை. தாமதத்திற்குக் காரணம் துறை சார்ந்ததா அல்லது வரி செலுத்துவோர் சார்ந்ததா என்பது முக்கியம். தாமதத்திற்குக் காரணம் வரி செலுத்துவோர் என்றால் - உதாரணமாக, முழுமையற்ற அல்லது தவறான தகவல்கள் அல்லது வரி அறிவிப்புகளுக்கு தாமதமாகப் பதிலளிப்பது போன்றவை - வட்டி செலுத்தப்படாது" என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+