சென்னையில் தொடரும் வருமான வரித் துறை சோதனை.. வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் ஓனர் வீட்டில் ரெய்டு நிறைவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று 2ஆவது நாளாக வருமான வரித் துறை சோதனை நடைபெறுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலே பொதுவாக அமலாக்கத் துறை ரெய்டு, லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு, வருமான வரித் துறை என நடப்பது வழக்கம்தான். அந்த வகையில் கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகளின் சோதனை பரபரப்பை கிளப்பி வருகிறது.

Income Tax officials continue their raid today in Chennai

மணல் குவாரி, கல் குவாரி, அரசு ஒப்பந்ததாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் அமைச்சர்கள், அவர்களின் பினாமிகள் உள்ளிட்டோரின் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடைபெறுகிறது.

அந்த வகையில் சென்னை கே கே நகரில் உள்ள வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நீலகண்டன் வீடு மற்றும் அவருடைய அலுவலகத்தில் நேற்று முதல் வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கம், மண்ணடியில் உள்ள தொழிலதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.

அது போல் கோபாலபுரத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபரான வினோத் கிருஷ்ணா வீட்டிலும் சோதனை நடைபெற்றது. கே கே நகர் , தி நகர் பகுதிகளிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். அது போல் பெங்களூர், கொச்சியில் உள்ள வழக்குத் தொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் இரண்டாவது நாளாக சென்னையில் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் நீலகண்டன் வீட்டில் சோதனை நிறைவடைந்தது. மற்ற இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+