Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்த இந்தியா! வீட்டுப் பரணில் இருக்கும் தங்கப் புதையல்! செம சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தங்கம்... தங்கம்... தங்கம்..." இந்தியர்களுக்கு இந்த மூன்று வார்த்தை போதும், மனக்கண்ணில் ஒரு கல்யாண மண்டபமோ அல்லது நகைக்கடை வீதியோ வந்துவிடும். ஆனால், இப்போது விஷயம் உங்கள் வீட்டு பீரோவில் இருக்கும் நகைகளைப் பற்றியது மட்டுமல்ல; இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றப்போகும் ஒரு பிரம்மாண்டமான பொருளாதார சக்தியைப் பற்றியது!

சமீபத்திய தரவுகளின்படி, இந்தியக் குடும்பங்களிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் (Central Banks) வைத்திருக்கும் கையிருப்பை விட அதிகமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் (GDP) தவிர்த்து, மற்ற எல்லா நாடுகளின் பொருளாதாரத்தையும் விட நம் வீட்டுத் தங்கம் அதிக மதிப்புடையது!

Forex Reserves

தங்கம் ஒரு 'உயிருள்ள' சொத்து!

இந்திய குடும்பங்களிடம் சுமார் 5 டிரில்லியன் டாலர் (USD 5 Trillion) மதிப்புள்ள தங்கம் முடங்கிக் கிடப்பதாக அசோசேம் (ASSOCHAM) அமைப்பு தெரிவித்துள்ளது. உலகத் தங்கக் கவுன்சில் கணக்குப்படி, இந்திய அரசின் கையிருப்பு 880 டன்கள் தான். ஆனால், நம் வீட்டுப் பரண்களில் இருக்கும் தங்கம் ஒரு 'மெகா புதையல்'.

தற்போது தங்கம் விலை உயர்ந்து வருவதால், சாமானிய மக்களின் 'Wealth Effect' எனப்படும் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால், இந்தத் தங்கம் பீரோவுக்குள் மட்டும் இருந்தால் போதுமா? என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

2047: இந்தியாவின் பொற்காலம்?

மத்திய அரசின் இலக்கான 2047 'வளர்ந்த இந்தியா' கனவை நனவாக்க இந்தத் தங்கம் ஒரு முக்கிய கருவியாக மாறப்போகிறது.

7.5 டிரில்லியன் டாலர் பிளஸ்: வீடுகளில் இருக்கும் தங்கத்தில் வெறும் 2 சதவீதத்தை மட்டும் ஒவ்வொரு ஆண்டும் முறையான நிதிச் சந்தைக்குள் (Financial Assets) கொண்டு வந்தால், 2047-க்குள் இந்தியாவின் ஜிடிபி-யில் கூடுதலாக 7.5 டிரில்லியன் டாலர் சேரும்.

பொருளாதாரப் பாய்ச்சல்: இந்தியாவின் ஜிடிபி 2047-ல் 34 டிரில்லியன் டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தங்கத்தை முறையாகப் பயன்படுத்தினால், அது 41.5 டிரில்லியன் டாலராக எகிறும்!

பீரோவிலிருந்து வங்கிக்கு...

தங்கத்தை வெறும் ஆபரணமாகப் பார்க்காமல், அதை நாட்டின் வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்தலாம்? அசோசேம் முன்வைக்கும் திட்டங்கள் இதோ:

தங்கப் பத்திரங்கள் மற்றும் சேமிப்பு திட்டங்கள்: தங்கத்தை வங்கியிடம் ஒப்படைத்து வட்டி பெறுவது அல்லது டிஜிட்டல் தங்கமாக மாற்றுவது.

தங்கக் கடன் (Gold Loans): ஏற்கனவே இது இந்தியாவில் ஹிட் அடித்து வருகிறது. 2025-26 நிதியாண்டில் மட்டும் நவம்பர் வரை 24.34 லட்சம் கோடி ரூபாய் தங்கக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

முதலீட்டுப் பாய்ச்சல்: இந்தத் தங்கம் நிதிச் சந்தைக்குள் வரும்போது, அது உற்பத்தித் துறை (Manufacturing), உட்கட்டமைப்பு (Infrastructure) மற்றும் விவசாயத் துறைக்குத் தேவையான முதலீடாக மாறும்.

வேலைவாய்ப்பும் வளர்ச்சியும்

தங்கம் பணமாக மாறிச் சுழலும்போது, அது சந்தையில் நுகர்வை (Consumption) அதிகரிக்கும். தொழிற்சாலைகள் விரிவடையும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

நம் ஊரில் ஒரு சொலவடை உண்டு, "ஆபத்துக்கு உதவும் தங்கம்" என்று. இப்போது அந்தத் தங்கம் தனிமனித ஆபத்துக்கு மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் கைகொடுக்கக் காத்திருக்கிறது. பீரோவில் தூங்கும் தங்கத்தை, தேசத்தின் வளர்ச்சிக்காகத் தட்டி எழுப்ப வேண்டிய நேரம் இது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+