இனி இஷ்டத்துக்கு புக் பண்ண முடியாது..ரயில் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றம்! ரயில்வே புது ரூல்ஸ்
சென்னை: நாட்டின் போக்குவரத்தின் முதுகெலும்பு என்றால் அது ரயில்வே துறை தான். இந்தியாவின் கடைகோடி பகுதிகளையும் இணைக்கும் ரயில்வே டிக்கெட் முன்பதிவில் பல முக்கிய மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. முன்பதிவுக்கான காத்திருப்பு காலம், தட்கல் டிக்கெட் மற்றும் பணத்தை திரும்ப பெறுவதற்கான விதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் அவை அமலுக்கு வந்துள்ளன.
இந்தியாவின் மிக முக்கிய துறை என்றால் அது ரயில்வே தான். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரயில்வே துறை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் அனைத்து பயணிகளையும் இணைக்கிறது. ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு ஆயிரக்கணக்கான ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன.
நாட்டிலேயே அதிக பணியாளர்களைக் கொண்ட துறையாக ரயில்வே இருக்கிறது. குறைந்த செலவில் பாதுகாப்பான பயணம் என்பதால் மக்களின் சிறந்த தேர்வாக ரயில்வே இருக்கிறது. பேசஞ்சர் ரயில்கள் மட்டும் இல்லாது எக்ஸ்பிரஸ் ரயில்கள், வந்தே பாரத், வந்தே பாரத் ஸ்லீப்பர் மின்சார ரயில்கள் ஆகியவையும் இந்தியா முழுமையும் இயக்கப்படுகிறது.

பல நாட்களுக்கு முன்பே ரயிலில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம். இந்த நிலையில் கோடை காலத்தில் அதிக மக்கள் பயணிப்பார்கள் என்பதால் ரயில்வே முன்பதிவு உள்ளிட்டவற்றில் மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அந்த விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடைசி நேர பயண சிக்கலை தவிர்ப்பதற்காக மக்கள் இதனை கவனிக்க வேண்டும்.
ரயில்வே முன்பதிவு பொருத்தவரை பல ஆண்டுகளாகவே குழப்பம் நிலவுகிறது. பதிவு செய்யும் பயணிகளும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. முன்பதிவு தேதி குழப்பம், ஏஜென்ட்களின் ஆதிக்கம், இணையதள பாட்கள் பயன்படுத்தப்படுவது ஆகியவை பயணிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தின. இதை அடுத்து பயணிகளுக்கு விரைவான அதே நேரத்தில் சிக்கல் இல்லா சேவை வழங்க ரயில்வே புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் ரயில் முன்பதிவு காலத்தை ஒரே மாதிரி மாற்ற இந்திய ரயில்வே முடிவு செய்திருக்கிறது. முன்பு சதாப்தி, எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்களுக்கு வெவ்வேறு வகையான முன்பதிவு காத்திருப்பு காலம் இருந்தது. இந்த நிலையில் தற்போது அனைத்து ரயில்களுக்கான காத்திருப்பு காலத்தை 120 நாட்களாக ரயில்வே மாற்றி உள்ளது. இதன் மூலம் அனைத்து வகை ரயில்களுக்கும் 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்ய முடியும். இதனால் பயணிகள் குழப்பம் இன்றி பயணிகள் முன்பதிவு செய்யலாம்.
அடுத்ததாக அவசரத் பயணங்களுக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு என்பது பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது. தற்போது அதிலும் குழப்பம் இருந்ததால் மிக்க நடைமுறையை ரயில்வே ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இடைத் தரகர்கள் அதிக அளவில் டிக்கெட்டுகளை பிளாக் செய்ததால் உண்மையான பயணிகள் சிரமம் அடைய வேண்டி இருந்தது. தற்போது அதற்கும் தீர்வு கண்டுள்ளது ரயில்வே. அதன்படி ஒரு ஐடி மூலம் ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு தட்கல் டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். அனைத்து வகை ரயில்களிலும் 30 சதவீத இருக்கைகள் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்காக ஒதுக்கப்படும். மேலும் கடந்த காலங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு 11 மணிக்கு தொடங்கும் நிலையில், இன்று முதல் 10 மணிக்கு தொடங்கும் எனவும் ரயில்வே விதிமுறைகளில் மாற்றம் செய்திருக்கிறது.
மூன்றாவதாக முன்பதிவு ரத்து செய்யப்பட்டால் பணத்தை திரும்ப பெறும் விதிகளிலும் மாற்றம் வந்திருக்கிறது. ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக மட்டும் செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால் அதில் 75 சதவீத பணம் மட்டுமே திரும்ப கிடைக்கும். 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 50 சதவீத பணம்தான் கிடைக்கும். 24 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால் எந்த பணமும் திரும்ப கிடைக்காது. ரயில்களில் ட்ராவல் சார்ட் தயாரிக்கும் நேரத்தில் கன்ஃபார்ம் ஆகாத வெயிட்டிங் லிஸ்டில் உள்ள பயணிகளுக்கு முழு பணமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த விதிகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருவதால், டிக்கெட் முன் பதிவு செய்யும் பயணிகள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications