இனி இஷ்டத்துக்கு புக் பண்ண முடியாது..ரயில் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றம்! ரயில்வே புது ரூல்ஸ்
சென்னை: நாட்டின் போக்குவரத்தின் முதுகெலும்பு என்றால் அது ரயில்வே துறை தான். இந்தியாவின் கடைகோடி பகுதிகளையும் இணைக்கும் ரயில்வே டிக்கெட் முன்பதிவில் பல முக்கிய மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. முன்பதிவுக்கான காத்திருப்பு காலம், தட்கல் டிக்கெட் மற்றும் பணத்தை திரும்ப பெறுவதற்கான விதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் அவை அமலுக்கு வந்துள்ளன.
இந்தியாவின் மிக முக்கிய துறை என்றால் அது ரயில்வே தான். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரயில்வே துறை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் அனைத்து பயணிகளையும் இணைக்கிறது. ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு ஆயிரக்கணக்கான ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன.
நாட்டிலேயே அதிக பணியாளர்களைக் கொண்ட துறையாக ரயில்வே இருக்கிறது. குறைந்த செலவில் பாதுகாப்பான பயணம் என்பதால் மக்களின் சிறந்த தேர்வாக ரயில்வே இருக்கிறது. பேசஞ்சர் ரயில்கள் மட்டும் இல்லாது எக்ஸ்பிரஸ் ரயில்கள், வந்தே பாரத், வந்தே பாரத் ஸ்லீப்பர் மின்சார ரயில்கள் ஆகியவையும் இந்தியா முழுமையும் இயக்கப்படுகிறது.

பல நாட்களுக்கு முன்பே ரயிலில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம். இந்த நிலையில் கோடை காலத்தில் அதிக மக்கள் பயணிப்பார்கள் என்பதால் ரயில்வே முன்பதிவு உள்ளிட்டவற்றில் மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அந்த விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடைசி நேர பயண சிக்கலை தவிர்ப்பதற்காக மக்கள் இதனை கவனிக்க வேண்டும்.
ரயில்வே முன்பதிவு பொருத்தவரை பல ஆண்டுகளாகவே குழப்பம் நிலவுகிறது. பதிவு செய்யும் பயணிகளும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. முன்பதிவு தேதி குழப்பம், ஏஜென்ட்களின் ஆதிக்கம், இணையதள பாட்கள் பயன்படுத்தப்படுவது ஆகியவை பயணிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தின. இதை அடுத்து பயணிகளுக்கு விரைவான அதே நேரத்தில் சிக்கல் இல்லா சேவை வழங்க ரயில்வே புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் ரயில் முன்பதிவு காலத்தை ஒரே மாதிரி மாற்ற இந்திய ரயில்வே முடிவு செய்திருக்கிறது. முன்பு சதாப்தி, எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்களுக்கு வெவ்வேறு வகையான முன்பதிவு காத்திருப்பு காலம் இருந்தது. இந்த நிலையில் தற்போது அனைத்து ரயில்களுக்கான காத்திருப்பு காலத்தை 120 நாட்களாக ரயில்வே மாற்றி உள்ளது. இதன் மூலம் அனைத்து வகை ரயில்களுக்கும் 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்ய முடியும். இதனால் பயணிகள் குழப்பம் இன்றி பயணிகள் முன்பதிவு செய்யலாம்.
அடுத்ததாக அவசரத் பயணங்களுக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு என்பது பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது. தற்போது அதிலும் குழப்பம் இருந்ததால் மிக்க நடைமுறையை ரயில்வே ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இடைத் தரகர்கள் அதிக அளவில் டிக்கெட்டுகளை பிளாக் செய்ததால் உண்மையான பயணிகள் சிரமம் அடைய வேண்டி இருந்தது. தற்போது அதற்கும் தீர்வு கண்டுள்ளது ரயில்வே. அதன்படி ஒரு ஐடி மூலம் ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு தட்கல் டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். அனைத்து வகை ரயில்களிலும் 30 சதவீத இருக்கைகள் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்காக ஒதுக்கப்படும். மேலும் கடந்த காலங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு 11 மணிக்கு தொடங்கும் நிலையில், இன்று முதல் 10 மணிக்கு தொடங்கும் எனவும் ரயில்வே விதிமுறைகளில் மாற்றம் செய்திருக்கிறது.
மூன்றாவதாக முன்பதிவு ரத்து செய்யப்பட்டால் பணத்தை திரும்ப பெறும் விதிகளிலும் மாற்றம் வந்திருக்கிறது. ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக மட்டும் செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால் அதில் 75 சதவீத பணம் மட்டுமே திரும்ப கிடைக்கும். 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 50 சதவீத பணம்தான் கிடைக்கும். 24 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால் எந்த பணமும் திரும்ப கிடைக்காது. ரயில்களில் ட்ராவல் சார்ட் தயாரிக்கும் நேரத்தில் கன்ஃபார்ம் ஆகாத வெயிட்டிங் லிஸ்டில் உள்ள பயணிகளுக்கு முழு பணமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த விதிகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருவதால், டிக்கெட் முன் பதிவு செய்யும் பயணிகள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications