Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம.. சர்வதேச சேவையை ஆரம்பிக்கும் இந்திய ரயில்வே.. எந்த நாட்டுக்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகளை கையாளும் இந்தியன் ரயில்வே, விரைவில் சர்வதேச சேவையை தொடங்க இருக்கிறதாம். சுற்றுலாப்பயணிகளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக வெளியாகி இருக்கும் இந்த தகவல் பற்றிய விவரங்களை இங்கே பார்ப்போம்.

இந்தியாவில் போக்குவரத்து துறையின் முதுகெலும்பாக ரயில்வே தான் உள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்திய ரயில்வேயும் உள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் மூலமே சென்று விடலாம். அந்த அளவுக்கு இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க் உள்ளது. பயணிகளின் வசதிக்காக தொடர்ந்து ரயில்வே பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.

Indian Railways will soon start international service, do you know what is the destination

அதேபோல், சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் நகரங்களை இயக்கும் வகையில் பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி கொடுக்கக் கூடிய வகையிலான ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இந்திய ரயில்வே ச்ர்வதேச ரயில் சேவையிலும் ஈடுபட இருக்கிறதாம். இந்தியாவில் இருந்து பூடானை இணைக்கும் வகையில் ரயில் விரைவில் இயக்கப்பட் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக அண்மையில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:- அண்டை நாடான பூடானுக்கு விரைவில் ரயில்கள் இயக்கப்படும். அசாமில் இருந்து இந்த ரயிலானது இயக்கப்படும். இருநாடுகளுக்கு இடையேயான சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த ரயில் இயக்கப்பட இருக்கிறது. சுற்றுலாப்பயணிகள் வருகையை அதிகரிக்கும் விதமாக அதிக பாயிண்ட்களை உருவாக்க பூடான் ஆர்வமாக உள்ளது.

Indian Railways will soon start international service, do you know what is the destination

இது அசாமிற்கும் மிகுந்த பயனளிக்கும் விதமாக இருக்கும்" என்று கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தியா - பூடானை ரயில் வழித்தடம் மூலம் இணைக்கும் பணிகள் 2026க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்த பூடான் வெளியுறவுத்துறை அமைச்சர் தன்ந்தி டோர்ஜி தனது சுற்றுப்பயணத்தின்போது கூறியதாவது:-

பூடான் அரசு இந்த திட்டத்தில் முதன் முதலாக பணிகளை மேற்கொள்ளும். பிறகு சாம்ட்சே, ஃபுயென்ஷோலிங், நங்காங்லாம் மற்றும் சம்ட்ருப்ஜோங்கர் ஆகிய பகுதிகளை இணைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும்" என்றார். பூடானின் கேலேப்ஹூ முதல் அசாமின் கோக்ரஜார் நகரத்தை இணைக்கும் வகையில் இந்த ரயில் சேவை இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

மலைப்பிரதேசங்கள் நிறைந்த இந்த வழித்தடம் சுற்றுலாப்பயணிகளை பெரிதும் ஈர்க்கும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இயற்கை வளங்களும் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் ரம்மியான சூழலை கொண்ட பூடான் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் இந்த ரயில் வழித்தடம் இணைக்கக்கூடியதாக உள்ளது. இந்தியர்கள் பூடானுக்கு செல்வதற்கு விசா எதுவும் தேவையில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+