செம.. சர்வதேச சேவையை ஆரம்பிக்கும் இந்திய ரயில்வே.. எந்த நாட்டுக்கு தெரியுமா?
சென்னை: நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகளை கையாளும் இந்தியன் ரயில்வே, விரைவில் சர்வதேச சேவையை தொடங்க இருக்கிறதாம். சுற்றுலாப்பயணிகளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக வெளியாகி இருக்கும் இந்த தகவல் பற்றிய விவரங்களை இங்கே பார்ப்போம்.
இந்தியாவில் போக்குவரத்து துறையின் முதுகெலும்பாக ரயில்வே தான் உள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்திய ரயில்வேயும் உள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் மூலமே சென்று விடலாம். அந்த அளவுக்கு இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க் உள்ளது. பயணிகளின் வசதிக்காக தொடர்ந்து ரயில்வே பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.

அதேபோல், சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் நகரங்களை இயக்கும் வகையில் பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி கொடுக்கக் கூடிய வகையிலான ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இந்திய ரயில்வே ச்ர்வதேச ரயில் சேவையிலும் ஈடுபட இருக்கிறதாம். இந்தியாவில் இருந்து பூடானை இணைக்கும் வகையில் ரயில் விரைவில் இயக்கப்பட் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக அண்மையில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:- அண்டை நாடான பூடானுக்கு விரைவில் ரயில்கள் இயக்கப்படும். அசாமில் இருந்து இந்த ரயிலானது இயக்கப்படும். இருநாடுகளுக்கு இடையேயான சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த ரயில் இயக்கப்பட இருக்கிறது. சுற்றுலாப்பயணிகள் வருகையை அதிகரிக்கும் விதமாக அதிக பாயிண்ட்களை உருவாக்க பூடான் ஆர்வமாக உள்ளது.

இது அசாமிற்கும் மிகுந்த பயனளிக்கும் விதமாக இருக்கும்" என்று கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தியா - பூடானை ரயில் வழித்தடம் மூலம் இணைக்கும் பணிகள் 2026க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்த பூடான் வெளியுறவுத்துறை அமைச்சர் தன்ந்தி டோர்ஜி தனது சுற்றுப்பயணத்தின்போது கூறியதாவது:-
பூடான் அரசு இந்த திட்டத்தில் முதன் முதலாக பணிகளை மேற்கொள்ளும். பிறகு சாம்ட்சே, ஃபுயென்ஷோலிங், நங்காங்லாம் மற்றும் சம்ட்ருப்ஜோங்கர் ஆகிய பகுதிகளை இணைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும்" என்றார். பூடானின் கேலேப்ஹூ முதல் அசாமின் கோக்ரஜார் நகரத்தை இணைக்கும் வகையில் இந்த ரயில் சேவை இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
மலைப்பிரதேசங்கள் நிறைந்த இந்த வழித்தடம் சுற்றுலாப்பயணிகளை பெரிதும் ஈர்க்கும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இயற்கை வளங்களும் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் ரம்மியான சூழலை கொண்ட பூடான் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் இந்த ரயில் வழித்தடம் இணைக்கக்கூடியதாக உள்ளது. இந்தியர்கள் பூடானுக்கு செல்வதற்கு விசா எதுவும் தேவையில்லை.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications