Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்கள தாண்டி தொடுடா பார்க்கலாம்.. பாகிஸ்தானுக்கு மரண பயம் காட்டும் இந்தியாவின் 4 தூண்கள்! இவைதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவுக்கு பதிலடி தருவதாக நினைத்து பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள், டிரோன்களை நம் வான் வழி பாதுகாப்பு கேடயமான எஸ் 400, ஆகாஷ், ஸ்பைடர், எம் ஆர் எஸ் ஏ எம், பராக் 8 ஆகியவை தடுப்பு தூண்களாக இருந்து இந்திய மண்ணில் விழ விடாமல் இடைமறித்து அழித்தன. பாகிஸ்தானின் டிரோன்கள், ஏவுகணைகளை துரத்தி துரத்தி அழித்தன. இவை ஒவ்வொன்றும் எந்த மாதிரி தாக்கும் திறன் கொண்டது, இதன் சிறப்புகள் என்னென்ன என்பதனை இங்கு பார்க்கலாம்.

பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள், டிரோன்களை இந்திய மண்ணில் விழ விடாமல் நம் வான் வழி பாதுகாப்பு கேடயமான எஸ் 400 சுதர்சன கவசம், ஆகாஷ், ஸ்பைடர், எம் ஆர் எஸ் ஏ எம், பராக் 8 ஆகியவை தடுப்பு தூண்களாக இருந்து இடைமறித்து அழித்தன வான் எல்லைப் பரப்பினை ஒரு கவசம் போல் பாதுகாத்தன. இவை ஒவ்வொன்றும் பாகிஸ்தானின் டிரோன்கள், ஏவுகணைகளை துரத்தி துரத்தி அழித்தன. இந்த வான்வழி பாதுகாப்பு அமைப்புகளான இவை ஒவ்வொன்றும் எந்த மாதிரி தாக்கும் திறன் கொண்டது, இதன் சிறப்புகள் என்னென்ன என்பதனை இங்கு பார்க்கலாம்.

எஸ்-400 சுதர்சன சக்கரம்

indias-4-powerful-weapons-to-protect-its-border-from-pakistan

* ரஷ்யாவின் எஸ்-400, சுதர்சன சக்கரம் போல சுற்றி, சுற்றி வந்து அழிக்கக் கூடியது.
* மின்னல் வேகத்தில் எதிரிகளின் ஏவுகணைகளை வானிலேயே அழித்து ஒழிக்கும்.
* 600 கிமீ சதுர பரப்பளவில் எதையும் தாக்கும் திறன் கொண்டது.
* 400 கி.மீ. தூரம் சென்று தாக்கக் கூடிய ஆற்றல் படைத்தது.
* ஏவுகணைகள், விமானங்கள், ஹைப்பர்சோனிக் ஆகிய அனைத்தையும் துல்லியமாக அழித்து ஒழிக்கும் சக்தி படைத்தது.

ஆகாஷ்

indias-4-powerful-weapons-to-protect-its-border-from-pakistan

* இந்தியாவே சொந்தமாகவே தயாரித்த வான் தடுப்பு அமைப்பு தான் இந்த ஆகாஷ்.
* 25 - 30 கி.மீ தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது.
* உயரத்தை பொறுத்தவரை 18 கீமீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது.
* மணிக்கு 3,000 கிமீ வேகத்தில் செல்லும்.
* ஒரே நேரத்தில் 12 இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டது.
* 2000 சதுர கிமீ தூரத்தை பாதுகாக்க முடியும்.

பராக்

indias-4-powerful-weapons-to-protect-its-border-from-pakistan

* இஸ்ரேலுடன் இணைந்து இந்தியா தயாரித்த வான் தடுப்பு அமைப்பு தான் இந்த பராக்.
* நுணுக்கமான தாக்குதல்களை கூட பராக் அழித்து ஒழிக்கும்.
* அதி நவீன சென்சார், டார்கெட் லாக்கிங் தொழில் நுட்பச் சிஸ்டம் இதில் உள்ளது.
* 15 - 80 கி.மீ தூரம் சென்று தாக்கும்.
* 10 - 18 கி.மீ. உயரம் வரை சென்று தாக்கும்.
* மணிக்கு 5000 கிமீ வேகத்தில் சென்று ஒரே நேரத்தில் 24 இலக்குகளை தாக்கும் சக்தி கொண்டது.
* 1000 சதுர கிமீ என்ற அளவுக்கு வான் பாதுகாப்பு அளிக்கும்.

ஸ்பைடர்

indias-4-powerful-weapons-to-protect-its-border-from-pakistan

* இஸ்ரேல் மற்றும் இந்தியா இணைந்து தயாரித்தது தான் ஸ்பைடர்.
* 100 கிமீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது.
* 10 அடி முதல் 16 கிமீ உயரம் வரை சென்று தாக்கக் கூடியது
* மணிக்கு 2500 கிமீ தூரத்தில் சென்று ஒரே நேரத்தில் 12 இலக்குகளை அழிக்கும்.
* 5 ஆயிரம் சதுர கிமீ அளவிலான வான் பாதுகாப்பினை இதனால் வழங்க முடியும்.

எம்ஆர் - எஸ்ஏஎம்

* பராக்கின் மற்றொரு வகை தான் எம்ஆர் - எஸ்ஏஎம் என்ற வான் பாதுகாப்பு அமைப்பு.
* இது 70 - 100 கி.மீ தூரம் வரை செய்து தாக்கக் கூடியது.
* 20 கிமீ உயரம் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது.
* மணிக்கு 3,700 கிமீ வேகத்தில் சென்று தாக்குவது மட்டும் இன்றி ஒரே நேரத்தில் 12 இலக்குகளை அழிக்கும் திறன் படைத்தது.
* சுமார் 7,000 சதுர கிமீ வான் பரப்பை பாதுகாக்கும் தன்மை கொண்டது.


எல்லையில் போர் பதற்றம்

கடந்த மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 6 ஆம் தேதி நள்ளிரவு 1.05 மணியளவில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் முகாம்கள் வேரோடு அழிக்கப்பட்டன.

வானிலேயே இடைமறித்து அழிப்பு

அதாவது இந்த தாக்குதலானது இந்தியாவின் ரபேல் விமானத்தில் இருந்து புறப்பட்ட ஸ்கால்ப் ஏவுகணைகள் மற்றும் ஹாம்மர் குண்டுகள் மூலமாக நடத்தப்பட்டது. மேலும் இந்திய மண்ணில் இருந்தபடியே இந்த தாக்குதலை வெற்றிகரமாக செய்து முடித்தது இந்திய ராணுவம். இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் இந்தியாவின் 15 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது.

இதனையும் இந்தியா தடுத்து நிறுத்தி வானிலேயே இடைமறித்து அழித்தது. தொடர்ந்து மறுநாளும் அதாவது நேற்று முன் தினம் இந்தியாவின் காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை குறி வைத்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை பாகிஸ்தான் அனுப்பியது. ஆனால் வானிலேயே அவற்றை அழித்து இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு சாவு பயத்தை காட்டியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+